News July 30, 2024

சென்னையில் பிரபல கூலிப்படை தலைவன் கைது

image

சென்னை நந்தனம் பகுதியைச் சேர்ந்த பாலாஜி என்கிற ஆர்.டி.ஆர் பாலாவை, தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். இவர், அசோக் நகரில் கடந்த 2021இல் நடந்த கொலை தொடர்பான வழக்கு விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதையடுத்து, சைதாப்பேட்டை நீதிமன்றம் 2023 டிசம்பர் மாதம் பிடிவாரண்டு பிறப்பித்தது. இந்த நிலையில், தற்போது ஆர்.டி.ஆர். பாலாவை, போலீசார் கைது செய்து எம்.ஜி.ஆர். நகர் காவல் நிலையத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News September 20, 2025

சென்னை தாங்க எல்லாத்துலையும் First

image

✅சென்னை – ஆசியாவின் முதல் மாநகராட்சி
✅ஸ்பென்சர் பிளாசா – இந்தியாவின் முதல் ஷாப்பிங் மால்
✅ஹிக்கின்பாதம்ஸ் – இந்தியாவின் முதல் புத்தக நிலையம்
✅புனித ஜார்ஜ் கோட்டை – இந்தியாவின் முதல் ஆங்கிலேய கோட்டை
✅மெட்ராஸ் முதலை பூங்கா – இந்தியாவின் முதலாவது
✅ராயபுரம் – தென் இந்தியாவின் முதல் ரயில் நிலையம்
✅சென்னைப் பல்கலைக்கழகம் – தென் இந்தியாவின் தாய் பல்கலைக்கழகம்
சென்னையின் பெருமையை மற்றவருக்கும் பகிருங்கள்

News September 20, 2025

சென்னையில் வேளாண் வணிகத் திருவிழா

image

சென்னை நந்தம்பாக்கத்தில் வேளாண் வணிகத் திருவிழா – 2025 செப்டம்பர் 27 மற்றும் 28 ஆகிய இரண்டு நாட்கள் சென்னை வர்த்தக மையம், நந்தம்பாக்கத்தில் நடைபெற உள்ளது. முதல்வர் ஸ்டாலின் வேளாண் வணிகத் திருவிழாவை தொடங்கிவைக்கிறார். 200க்கும் மேற்பட்ட உழவர் உற்பத்தி நிறுவனங்கள் இதில் பங்கேற்கின்றன. இந்த மாபெரும் கண்காட்சியில் அனைவரும் பங்கு பெறலாம். அனுமதி இலவசம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News September 20, 2025

சென்னை: தலைக்கேறிய மது போதை… காதலி மரணம்!

image

சென்னை மதுரவாயில் அடுத்த ஆலப்பாக்கத்தில் கணேஷ் ராம்(29) என்ற காதலனும் ராயப்பேட்டையை சேர்ந்த ஸ்ரீ லட்சுமி(26) என்ற காதலியும் கணேஷ் ராம் அறையில் அளவுக்கு அதிகமாக மது அருந்தியுள்ளனர். பின்பு ஸ்ரீ லட்சுமி கோழி இறைச்சி சமைத்து சாப்பிட்டுள்ளனர். சிறிது நேரத்தில் அவர் வாந்தி எடுத்து கழிவறையில் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். சம்பவம் குறித்து மதுரவாயல் போலீசார் காதலனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!