News July 30, 2024
காஞ்சிபுரம் நெசவாளருக்கு தேசிய விருது

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பிள்ளையார்பாளையம் பகுதியில் உள்ள முத்தீஸ்வரர் கோவில் சன்னதி தெருவில் வசிப்பவர் பாலசுப்பிரமணியம். நெசவாளரான இவருக்கு இந்தாண்டுக்கான ‘சிறந்த காஞ்சிபுரம் பட்டு கைத்தறி நெசவாளர்’ என்ற தேசிய விருதை மத்திய அமைச்சகம் அறிவித்துள்ளது. இவருக்கு ரூ.2 லட்சம் ரொக்கமும், தாமிரப் பட்டையும் வரும் 7ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் நிகழ்ச்சியில் வழங்கப்பட உள்ளது.
Similar News
News August 28, 2025
காஞ்சியில் பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. 2 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு குடும்ப வருமானம் ரூ.1,20,000க்கு மிகாமல் இருக்க வேண்டும். இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க. <<17539569>>தொடர்ச்சி<<>>
News August 28, 2025
காஞ்சி: பெண் பிள்ளை உள்ளதா? உடனே விண்ணப்பியுங்கள் (2/2)

இந்த திட்டத்தில் பயன்பெற குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை அல்லது இரண்டு பெண் குழந்தைகள் மட்டுமே இருக்க வேண்டும். ஆண் குழந்தை இருக்கக் கூடாது. பெற்றோரில் ஒருவர் 40 வயதிற்குள் குடும்ப நல அறுவை சிகிச்சை செய்திருக்க வேண்டும். மேலும், வருமானச் சான்றிதழ், பெண்குழந்தைக்கான பிறப்புச் சான்றிதழ், கருத்தடை சான்றிதழ், ஆண் குழந்தை இல்லை என்பதற்கான சான்றிதழ் போன்ற ஆவணங்கள் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும். (SHARE)
News August 28, 2025
காஞ்சியில் கட்டாயம் செல்ல வேண்டிய கோயில்கள்

▶காஞ்சிபுரம் சுப்பிரமணியர் கோயில்
▶காஞ்சிபுரம் சுப்ரமணிய சுவாமி கோயில்
▶காஞ்சிபுரம் மேல்கோட்டம் சுப்பிரமணியசுவாமி கோயில்
▶குமரன்குன்றம் பாலசுப்ரமணியர் கோயில்
▶செய்யூர் கந்தசாமி கோயில்
▶நடுபழனி மரகத தண்டாயுதபாணி கோயில்
▶புருசை கிராமம் பாலமுருகன் கோயில்
▶வல்லக்கோட்டை முருகன் கோவில்
மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க!