News July 30, 2024

குமரியில் ஓடும் பேருந்தில் கை வரிசை

image

கன்னியாகுமரியில் இருந்து களியக்காவிளைக்கு அரசு பேருந்து இன்று காலை பயணிகளுடன் புறப்பட்டு சென்றது. அப்போது, கொட்டாரத்தில் ஒரு பெண் அணிந்திருந்த நகையை கூட்டத்தில் ஒரு பெண் நைசாக கழட்டினார். இதையறிந்த அந்த பெண் கூச்சலிட்டார். பின்னர் கன்னியாகுமரி போலீசுக்கு தகவல் அளிக்கப்பட்டு, விசாரித்த போது தூத்துக்குடியை சேர்ந்த 3 பெண்கள் சேர்ந்து திருட முயன்றது தெரிந்தது. இதையடுத்து, அவர்களை கைது செய்தனர்.

Similar News

News August 13, 2025

திருவள்ளுவர் சிலைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

image

கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவுமண்டபம், திருவள்ளுவர் சிலை மற்றும் கண்ணாடி பாலம் ஆகியவற்றை காண தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் சென்று பார்வையிட்டு வருகிறார்கள். இந்த நிலையில் இந்தியாவின் சுதந்திர தினத்தையொட்டி கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு (இன்று ஆக.13) துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

News August 13, 2025

குமரி: இந்த App-ஐ உடனே Download பண்ணுங்க.!

image

மத்திய அரசு ‘சஞ்சார் சாதி’ எனும் செயலியை அறிமுகம் செய்துள்ளது. மோசடி, தொலைந்து போன அல்லது திருடு போன மொபைல் இணைப்புகளை கண்டறிய, டிஜிட்டல் மோசடி குறித்து இந்த ஆப்-ல் புகார் அளிக்கலாம். இந்த ஆப் மூலம் திருடு போன லட்சக்கணக்கான போன்கள் கண்டுபிடிக்கப்பட்டும், மோசடிகளுக்கு நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. இந்த App நம் எல்லாருக்கும் மிக மிக அவசியம். உடனே இந்த <>*லிங்கை கிளிக்<<>> செய்து டவுன்லோட் பண்ணுங்க.!

News August 13, 2025

குமரி: ஆரம்ப சுகாதார நிலையத்தில் வேலை..!

image

கன்னியாகுமரி, பெருவிளையில் புதிதாக தோற்றுவிக்கப்பட்ட நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய செவிலியர் – 25, மருந்தாளுநர் -1, ஆய்வக நுட்புநர் – 3, பல்நோக்கு பணியாளர் – 3, ஆலோசகர் – 1 உள்ளிட்ட பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியுள்ளவர்கள் <>இந்த லிங்கை<<>> க்ளிக் செய்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து 25.08.2025க்குள் விண்ணப்பிக்கவும். #SHARE

error: Content is protected !!