News July 29, 2024

வடலூர் பள்ளி மாணவன் மூளைச்சாவு

image

வடலூரில் உள்ள சீயோன் மெட்ரிக் பள்ளியில், பார்வதிபுரத்தை சேர்ந்த திருமுருகன் மகன் கிஷோர் (15). 10-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த கடந்த 24ஆம் தேதி பள்ளியில் நடந்த விளையாட்டு பயிற்சியின் போது, சக மாணவர் எறிந்த ஈட்டி அவரது தலையில் பாய்ந்ததில் படுகாயமடைந்த கிஷோர், விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று மூளைச்சாவு அடைந்தார்.

Similar News

News November 11, 2025

கடலூர்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விபரம்

image

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அவ்வகையில் நேற்று (நவ.10) இரவு 10 மணி முதல் இன்று (நவ.11) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி உள்ளிட்ட இடங்களில் ரோந்து செல்லும் காவல் அலுவலர்கள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News November 10, 2025

கடலூர் மக்களே.. உடனடி தீர்வு வேண்டுமா?

image

கடலூர் மக்களே உங்கள் ஊரில் தெருவிளக்கு, சாலை, குடிநீர் , மருத்துவமனை, கழிவுநீர், பள்ளிகூடங்களில் உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகளுக்கும் உடனே தீர்வு கிடைக்க வேண்டுமா? TN <>Smart <<>>என்ற இணையதளத்தின் மூலம் உங்கள் மாவட்டம், வட்டம், கிராமத்தை தேர்வு செய்து பிரச்சனைகளை நீங்களே அரசுக்கு நேரடியாக புகார் கொடுக்க முடியம். உங்கள் புகார் குறித்து உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News November 10, 2025

கடலூர்: இன்ஜினியர் பணியிடங்கள் அறிவிப்பு

image

பாரத் எர்த் மூவர்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள 100 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. சம்பளம்: ரூ.35,000 – 43,000/-
3. கல்வித் தகுதி: B.E / B.Tech
5. வயது வரம்பு: 18 – 29 (SC/ST-34, OBC-32)
6. கடைசி தேதி: 12.11.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க:<> CLICK HERE<<>>
8. BE முடித்தவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!