News July 29, 2024
காவிரி கரையோர பகுதிகளில் மாவட்ட எஸ்பி ஆய்வு

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஜனதா நகர் உள்ளிட்ட காவிரி கரையோர பகுதிகளில், மேட்டூர் அணையில் திறக்கப்படும் நீரின் அளவு அதிகரித்துள்ளதால், வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால், நாமக்கல் மாவட்ட எஸ்பி ராஜேஷ் கண்ணன் இன்று முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். பள்ளிபாளையம் காவல் ஆய்வாளர் உள்ளிட்டோர் ஆய்வின்போது உடன் இருந்தனர.
Similar News
News September 9, 2025
நாமக்கல்லில் முட்டை விலையில் மாற்றமில்லை !

நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் நாமக்கல் கிளைக் கூட்டம் இன்று (செப்டம்பர் 8) நடைபெற்றது. கூட்டத்தில், ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.5.15 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. மழை மற்றும் குளிர் காரணமாக முட்டையின் தேவை அதிகரித்துள்ள போதிலும், அதன் விலையில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. கடந்த 12 நாட்களாக முட்டை விலை ரூ.5.15 ஆகவே நீடிப்பதாகக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
News September 8, 2025
நாமக்கல்: நான்கு சக்கர வாகன ரோந்து காவலர் விபரம்

நாமக்கல் மாவட்டத்தில் செப்டம்பர் 8 ஆம் தேதி இரவு 4 சக்கர வாகன ரோந்து பணிக்காக காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் நாமக்கலில் ராஜமோகன் ( 9442256423), வேலூர் – ரவி ( 9598168482), ராசிபுரம் – சின்னப்பன் ( 9498169092), திருச்செங்கோடு – டேவிட் பாலு ( 9486540373), திம்மநாயக்கன்பட்டி – ரவி ( 9498168665), குமாரபாளையம் – செல்வராஜூ ( 9994497140), ஆகியோர் இரவு ரோந்து பணியில் உள்ளனர் .
News September 8, 2025
நாமக்கல்லில் வரும் 10ஆம் தேதி இலவசம்!

நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் வருகிற 10ஆம் தேதி (புதன்கிழமை) காலை 10 மணிக்கு திலேபியா மீன்வளர்ப்பு என்கிற தலைப்பில் ஒருநாள் இலவச பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. இதில் விவசாயிகள், பண்ணையாளர்கள், ஊரக மகளிர், இளைஞர்கள் மற்றும் ஆர்வம் உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம்.இந்த பயிற்சி முகாமில் பங்கேற்க விரும்பும் நபர்கள் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.