News July 29, 2024
மாணவர்கள் பலி தொடர்பாக கவன ஈர்ப்பு நோட்டீஸ்

ஐஏஎஸ் பயிற்சி மாணவர்கள் 3 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த 7 எம்பிக்கள் கவன ஈர்ப்பு நோட்டீஸ் வழங்கியுள்ளனர். ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் வெள்ள நீர் புகுந்து மாணவர்கள் இறந்த நிலையில், இதற்கு காரணமான 5 பேரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். இந்த மரண விவகாரம் தொடர்பாக உடனே விவாதிக்க எம்பிக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Similar News
News December 5, 2025
உங்க ஊரில் வேலை வேணுமா? Way2News-ல் பாருங்கள்!

Way2News ஆப், புதிதாக உள்ளூர் வேலைவாய்ப்புகள் பிரிவை அறிமுகம் செய்துள்ளது. இதில் உங்கள் ஊரில் உள்ள தொழிற்சாலை, அலுவலக, திறன்சார்ந்த மற்றும் டெலிவரி பாய் உள்பட அனைத்து வகை வேலை வாய்ப்புகளையும் தெரிந்துகொள்ளலாம். உங்களுக்கு அருகில் உள்ள வேலைவாய்ப்புகளை அறிய Way2News app-ல் உள்ள Jobs பிரிவில் பார்த்து பயனடையுங்கள். உங்களுக்கு மெனுவில் Jobs பிரிவு வரவில்லை எனில் Way2News App-ஐ அப்டேட் செய்யவும்.
News December 5, 2025
ரெப்போ வட்டி விகிதத்தை 0.25% குறைத்த ரிசர்வ் வங்கி

வங்கிகளுக்கு வழங்கப்படும் குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை 0.25% குறைத்து RBI அறிவித்துள்ளது. இதன் மூலம் வட்டி விகிதம் 5.25% ஆக குறைந்துள்ளது. RBI-ன் இந்த அதிரடி முடிவால் வாடிக்கையாளர்களின் வீடு, வாகன கடன்களுக்கான வட்டி விகிதம் கணிசமாக குறையும். 2024 அக்டோபரில் 6.50% ஆக இருந்த ரெப்போ வட்டி விகிதம் இந்தாண்டின் இறுதியில் 5.25% ஆக அதாவது 1.25% குறைந்துள்ளது கவனிக்கத்தக்கது.
News December 5, 2025
மதுரை மக்களுக்கு இதுதான் வேண்டும்: CM ஸ்டாலின்

மெட்ரோ ரயில், AIIMS, புதிய தொழிற்சாலைகள் & வேலைவாய்ப்புகளை தான் மதுரை மக்கள் கேட்பதாக CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருப்பரங்குன்றம் சர்ச்சையை குறிப்பிட்டு பதிவிட்ட அவர், ‘மதுரைக்கு தேவை வளர்ச்சி அரசியலா அல்லது …….. அரசியலா என்பதை மக்கள் முடிவு செய்வார்கள்’ என சூசகமாக மத்திய பாஜக அரசை சாடியுள்ளார். மதுரை மெட்ரோவுக்கான TN அரசின் அறிக்கையை மத்திய அரசு திருப்பி அனுப்பியதும் குறிப்பிடத்தக்கது.


