News July 29, 2024

ஒருங்கிணைந்த பண்ணையம் அமைக்க விண்ணப்பிக்கலாம்

image

தேனி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பண்ணையம் அமைக்கப்பட உள்ளது. இந்த பண்ணையம் அமைக்க விவசாயிகள் குறைந்தபட்சம் ஒரு ஹெக்டேர் நிலம் வைத்திருக்க வேண்டும். இதில் ஒரு ஹெக்டேர் பரப்பில் கால்நடை தீவனங்கள் வளர்க்க சோளம், மக்காச்சோள விதைகள், ஒரு கால்நடை உள்ளிட்டவை வழங்கப்படும். இத்திட்டம் தொடர்பான விபரங்களுக்கு அருகிலுள்ள வேளாண் விரிவாக்க மையத்தை தொடர்பு கொள்ளலாம் என வேளாண் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Similar News

News November 9, 2025

தேனி அருகே கத்தியால் குத்திக் கொலை

image

வீரபாண்டி பகுதியை சோ்ந்தவா் விக்னேஷ் (25). ஆட்டோ ஓட்டுனரான இவர் நேற்று (நவ.8) தனது வீட்டில் அதே பகுதியை சோ்ந்த நண்பா்களான யுவராஜா, அபிஷேக் ஆகியோருடன் சோ்ந்து மது அருந்தியதாக கூறப்படுகிறது. அப்போது நண்பர்களிடையே ஏற்பட்ட தகராறில் யுவராஜா, விக்னேஷை கத்தியால் குத்தியுள்ளார். இதில் விக்னேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் வீரபாண்டி போலீசார் யுவராஜா, அபிஷேக் ஆகியோரை கைது செய்தனர்.

News November 9, 2025

தேனி: ரூ.5 லட்சம் பரிசு அறிவிப்பு

image

நெல் சாகுபடியில் அதிக மகசூல் பெறும் விவசாயிக்கு நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தி விருது மற்றும் பரிசுத்தொகை ரூ.5 லட்சம் வழங்கப்படுகிறது. இதில் பங்கேற்க விரும்பும் தேனி மாவட்ட விவசாயிகள் போட்டி கட்டணமாக ரூ.150 செலுத்தி மார்ச்.31.க்குள் பதிவு செய்ய வேண்டும். இது குறித்த மேலும் விபரங்களுக்கு அருகில் உள்ள வேளாண் விரிவாக்க மையங்களை தொடர்பு கொள்ளலாம் என வேளாண் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். SHARE IT

News November 8, 2025

தேனி: ஆற்றங்கரையில் முதியவர் உடல் மீட்பு.!

image

சின்னமனூர் அருகே எல்லப்பட்டி பகுதியில் செல்லக்கூடிய முல்லைப் பெரியாற்றங்கரையில் நேற்று (நவ.7) முதியவர் ஒருவர் இறந்த நிலையில் கிடப்பதாக சின்னமனூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் இறந்தவர் கம்பம் பகுதியை சேர்ந்த மாயாண்டி (75) என்பதும், இவருக்கு ஏற்பட்ட உடல்நல குறைபாடு காரணமாக ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.

error: Content is protected !!