News July 29, 2024
இந்தியாவில் வாட்ஸ் அப் சேவை நிறுத்தம்?

பயனாளர்களை தகவல்களை அரசிடம் பகிர கூறி கட்டாயப்படுத்துவதால், இந்தியாவில் வாட்ஸ் அப் சேவை நிறுத்தப்பட வாய்ப்புள்ளதா என ராஜ்ய சபாவில் காங்., உறுப்பினர் விவேக் டன்கா கேள்வி எழுப்பினார். இது குறித்து அந்நிறுவனம் எவ்வித தகவலையும் அரசிடம் பகிரவில்லை எனவும், நாட்டின் பாதுகாப்பிற்காகத்தான் பயனாளர்களின் தகவல்களை பகிர சொல்லி கேட்டதாகவும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதில் அளித்துள்ளார்.
Similar News
News December 4, 2025
அறிவித்தார் நீலகிரி கலெக்டர்!

நீலகிரி மாவட்டத்தில் டிசம்பர் 19.12.2025 அன்று காலை 11.00 மணிக்கு விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்; உதகமண்டலம், பிங்கர் போஸ்ட் பகுதியில் உள்ள மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது.கலெக்டர் தலைமையில் நடக்கும் இந்த கூட்டத்தில் மாவட்ட விவசாயிகள் நேரடியாக பங்கேற்று, விவசாயம் தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது
News December 4, 2025
மத நம்பிக்கையை தடுப்பது நல்லிணக்கமா? கோர்ட்

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றும் உத்தரவிற்கு எதிராக TN அரசின் மேல்முறையீடு வழக்கில் இன்றே தீர்ப்பு வழங்கப்படவுள்ளது. இதை விசாரித்த மதுரை கோர்ட், ஒரு மதத்தின் நம்பிக்கையை தடுப்பது எப்படி சமூக நல்லிணக்கமாகும் என கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், யாருக்கும் பாதிப்பு இல்லாமல் தீபம் ஏற்றுவதை ஏன் ஒரு தரப்பு தடுக்க வேண்டும் என கேட்ட நீதிபதிகள், இதுகுறித்து ஆலோசிக்க சென்றுள்ளனர்.
News December 4, 2025
பாமகவின் மாம்பழ சின்னம் முடக்கப்படுமா?

பாமகவும், மாம்பழ சின்னமும் யாருக்கு சொந்தம் என்ற வழக்கு டெல்லி HC-ல் நடந்துவருகிறது. பதவிக்காலம் முடிந்தும் அன்புமணியை தலைவர் என ECI அங்கீகரித்துள்ளதாக ராமதாஸ் தரப்பு சொல்கிறது. இதனால், இவ்வழக்கில் தற்போதைக்கு ஒரு முடிவு எட்டப்படவில்லை. ஒருவேளை தேர்தல் வரை இப்பிரச்னை தொடர்ந்தால் மாம்பழம் சின்னம் முடக்கப்படலாம் எனவும், இது இருதரப்புக்கும் பின்னடைவு என்றும் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.


