News July 28, 2024

தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் நாளை போராட்டம் அறிவிப்பு

image

கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை முதல் ஜூலை 31 வரை சென்னை டிபிஐ வளாகத்தை முற்றுகையிட்டு போராட உள்ளதாக, தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு அறிவித்துள்ளது. பதவி உயர்வை பறிக்கும் அரசாணை 243 ரத்து, காலிப் பணியிடங்களை நிரப்புதல் போன்றவற்றை வலியுறுத்தி போராடுவதாக அந்தக் குழு அறிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் நாளை தொடக்கப் பள்ளிகள் செயல்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Similar News

News July 5, 2025

வேலைவாய்ப்பு இலக்கை முந்தி TNPSC சாதனை..

image

ஜனவரி 2026-க்குள் 17,595 காலிப்பணியிடங்களை நிரப்ப TNPSC இலக்கு நிர்ணயித்திருந்த நிலையில், ஜூன் 2024 முதல் ஜூன் 2025 வரை 17,702 இளைஞர்களை தேர்வு செய்துள்ளது. இதன்மூலம், 7 மாதங்களுக்கு முன்பாகவே நிர்ணயித்த இலக்கை எட்டி சாதனை படைத்துள்ளது TNPSC. மேலும் கூடுதலாக 2500+ இடங்களுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன என்றும் அது 2026 ஜனவரிக்குள் நிரப்பப்படும் எனவும் TNPSC அறிவித்துள்ளது.

News July 5, 2025

சீனாவை சீண்டிய கிரண் ரிஜிஜு.. என்ன ஆச்சு?

image

தலாய் லாமாவின் வாரிசு நியமனம் அவரது விருப்பப்படி அமைய வேண்டும் என்ற மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜுவின் கருத்துக்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. திபெத் விவகாரங்களில் இந்தியா எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் எனவும், இருதரப்பு உறவுகளைப் பாதிக்காதவாறு தனது நிலைப்பாட்டை மதிக்க வேண்டும் எனவும் சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாஓ நிங் வலியுறுத்தியுள்ளார்.

News July 5, 2025

அடுத்தடுத்து டக் அவுட் ஆகிய 6 பேர்… அசத்தல் சிராஜ்!

image

தனது முதல் இன்னிங்ஸில் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் ஓபனர்கள் பென் டக்கட், ஆலி போப் ஆகியோர் அடுத்தடுத்து டக் அவுட் ஆகி வெளியேறினர். ஜோ ரூட் 22 ரன்களிலும், பென் ஸ்டோக்ஸ், பஷீர், பிரைடன் ஆகியோர் டக் அவுட்டும் ஆக இங்கிலாந்து அணி சுருண்டது. இந்த வகையில் 6 பேட்ஸ்மென்கள் டக் அவுட் ஆகியுள்ளனர்.

error: Content is protected !!