News July 28, 2024
இனி ₹7.5 லட்சம் வரை கடன் பெறலாம்

₹1.5 லட்சமாக இருந்த மத்திய அரசின் மாதிரி திறன் கடன் திட்டத்தின் வரம்பு, தற்போது ₹7.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. மார்ச் 31 வரையில் கடன் வாங்கியுள்ள 10,077 நபர்களுக்கு, கடன் தொகையை நீட்டிப்பதற்காக ₹115.75 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 25,000 மாணவர்கள் பயனடைவார்கள் என்று கூறப்படுகிறது. வங்கிகள், நிதி, மைக்ரோ ஃபைனான்ஸ் நிறுவனங்களிலும் கடன்களை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News March 7, 2026
சுதந்திரத்தை கொண்டாடாத காந்தி.. ஏன் தெரியுமா?

1947 ஆகஸ்ட் 15இல் இந்தியா தனது சுதந்திரத்தை கொண்டாடிக் கொண்டிருந்தபோது, காந்தி மட்டும் கொண்டாடவில்லை. ஏன் என கேள்வி எழலாம். தற்போதைய மேற்குவங்கம், வங்கதேசத்தில் (அப்போது வங்காளம்) இந்துக்கள், முஸ்லிம்கள் இடையே கலவரம் மூண்டது. இதனால் கொல்கத்தாவில் தங்கி சமரச முயற்சியில் ஈடுபட்டதால், அவர் கொண்டாடவில்லை. 1948 ஜனவரியில் கொல்லப்பட்டதால், அவரால் கடைசி வரை சுதந்திரத்தை கொண்டாடவே முடியவில்லை.
News March 7, 2026
BIG NEWS: தமிழகத்தை உலுக்கிய ரேப் வழக்கில் பரபரப்பு தீர்ப்பு

கோவையில் கல்லூரி மாணவியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட மூவரும் குற்றவாளிகள் என கோர்ட் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. பாலியல் வன்கொடுமை செய்த சிவகங்கையைச் சேர்ந்த சதீஷ், கார்த்திக், தவசி மீது 8 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், 126 நாள்களில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர்களுக்கான தண்டனை விவரம் இன்றே அறிவிக்கப்படவுள்ளது.
News March 7, 2026
சுயதொழில் தொடங்க லோன் வேண்டுமா? இதோ திட்டம்

பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த பெண்களுக்கு சுயதொழில் தொடங்க ₹2 லட்சம் கடன் வழங்குகிறது புதிய ஸ்வர்ணிமா திட்டம். இதனை திருப்பி செலுத்த 3 – 8 ஆண்டுகள் அவகாசம் அளிக்கப்படுகிறது. விண்ணப்பதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ₹3 லட்சத்திற்கு மிகாமல் இருக்கணும். விண்ணப்பிக்க https://nsfdc.nic.in/channel-patrners/scas என்ற இணையதளத்தை பார்வையிடவும். உங்க வீட்டு பெண்களுக்கு SHARE பண்ணுங்க.


