News July 28, 2024

தமிழ்நாட்டில் கொலைகள் அதிகரிப்பு: இபிஎஸ்

image

தமிழகத்தில் கொலை, கொள்ளை அதிகரித்து சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் விமர்சித்துள்ளார். தமிழகத்தில் கொலை நடக்காத நாளே இல்லை என்ற அளவுக்கு கொலை நகரமாக மாறியுள்ளதாக சாடிய அவர், அரசியல்வாதிகளுக்கும், மக்களுக்கும் பாதுகாப்பில்லாத நிலை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், போதைப் பழக்கங்களால் தான் இத்தகைய சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Similar News

News March 10, 2026

BREAKING: கேஸ் சிலிண்டர்.. அரசு அவசர அறிவிப்பு

image

சிலிண்டர்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், அத்தியாவசிய பொருள்கள் சட்டம் 1955-ஐ மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை சீரமைக்கும் வகையில், மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. சிலிண்டர்களை பதுக்குதல், கள்ளச்சந்தையில் விற்பனை செய்தல் ஆகியவற்றில் ஈடுபட்டால் அபராதம் விதிக்கப்படுவதோடு, கைது நடவடிக்கையும் எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

News March 10, 2026

அதிமுகவில் இணைந்த மதிமுகவின் முக்கிய தலைவர்!

image

மதிமுக மாநில நிர்வாகி கோடையடி ராமசந்திரன், கடம்பூர் ராஜு முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். அவரது ஆதரவாளர்கள் 200-க்கும் மேற்பட்டோரும் அதிமுகவில் ஐக்கியமாகியுள்ளனர். மதிமுகவுக்கு கணிசமான வாக்கு வங்கி உள்ள விருதுநகரில் நடந்த இந்த மாற்றம் திமுக கூட்டணிக்கு சற்று ஷாக் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், தேமுதிக நிர்வாகிகள் சிலரும் அதிமுகவில் இணைய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் கசிந்துள்ளது.

News March 10, 2026

Sports 360°: சர்ச்சையில் சிக்கிய கால்பந்து லெஜெண்ட் மெஸ்ஸி

image

➤இலங்கை அணியின் கோச்சாக இந்தியாவின் Ex. கோச் கேரி கிர்ஸ்டன் நியமிக்கப்பட்டுள்ளார் ➤ஹாக்கி WC தகுதிச்சுற்றில் ஸ்காட்லாந்துக்கு எதிரான ஆட்டத்தை 2-2 என சமன் செய்தது இந்திய மகளிர் அணி ➤வெள்ளை மாளிகையில் ஈரான் மீதான தாக்குதல் குறித்து டிரம்ப் பேசியதை கைதட்டி வரவேற்றதால் மெஸ்ஸி சர்ச்சையில் சிக்கியுள்ளார் ➤மகளிர் ஆசிய கோப்பை(கால்பந்து): காலிறுதி வாய்ப்பை தக்கவைக்க இன்று சீன தைபே உடன் இந்தியா மோதுகிறது.

error: Content is protected !!