News July 28, 2024

மனித வடிவில் அதிசய நகரம் பார்த்துள்ளீர்களா?

image

வானில் இருந்து பார்க்கையில் கீழே மனித வடிவில் நகரம் ஒன்று உள்ளது. அது எந்த நாட்டில் உள்ளது என தெரியுமா? இத்தாலி நாட்டின் சிசிலி தீவில்தான் அந்நகரம் அமைந்துள்ளது. பழமையான சென்டூரிப் நகரம்தான் அந்நகராகும். அங்கு சுமார் 5,000 மக்கள் வசிக்கின்றனர். கடந்த 2021ஆம் ஆண்டில் பெரி என்பவர் முதன்முதலில் அந்நகரை வானில் இருந்து புகைப்படம் எடுத்தபோதுதான் இந்த அதிசயம் உலகுக்கு தெரிய வந்தது.

Similar News

News March 12, 2026

இனி டெலிகிராமில் புது படங்களை பார்க்க முடியாது..

image

OTT-க்கு பணமில்லை என்பதால் பெரும்பாலானோர் புது படங்களை டெலிகிராமில் பார்க்கின்றனர். இதனால் தங்களின் வருமானம் பாதிக்கப்படுவதாக கூறி ஜியோ சினிமா, அமேசான் பிரைம் நிறுவனங்கள் புகார் எழுப்பியது. இந்நிலையில், சட்டவிரோதமாக பதிவேற்றப்படும் படங்கள் பதிவேற்றும் 3,100 சேனல்களை 3 மணி நேரத்திற்குள் நீக்க டெலிகிராமுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. உங்கள் கருத்து?

News March 12, 2026

தங்கையை ரேப் செய்த அக்காவின் காதலன்

image

சென்னை, ஓட்டேரியில் 14 வயது பள்ளி மாணவியை, அக்காவின் காதலனே பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம் அரங்கேறியுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமியின் அக்காவுக்கும், அவரது காதலனுக்கும் திருமணம் செய்ய இருவீட்டார் சம்மதம் தெரிவித்ததால், அவர் அடிக்கடி வீட்டிற்கு வந்து சென்றுள்ளார். அண்மையில் சிறுமியின் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில், இந்த அவலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தலைமறைவான இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.

News March 12, 2026

கேஸ் சிலிண்டர் பதுக்கல்.. TN-ல் முதல் முறையாக கைது!

image

கேஸ் சிலிண்டர்களை பதுக்கி வைத்திருந்த 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு <<19343866>>அத்தியாவசிய பொருள்கள் சட்டத்தை(ECA)<<>> அமல்படுத்தியது. அதன்படி, கேஸ் சிலிண்டர் பதுக்கி வைத்தால் 3 மாதம் முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். இந்நிலையில், TN-ல் முதல் முறையாக நெல்லையில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், 17 சிலிண்டர்களை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஜாக்கிரதை!

error: Content is protected !!