News July 28, 2024
தமிழ் ராக்கர்ஸ் தளத்தில் புதிய படம் பதிவேற்றம் செய்தவர் கைது

தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் புதிய படங்களை பதிவேற்றம் செய்த மதுரையைச் சேர்ந்த ஸ்டீபன் ராஜ் என்பவரை மதுரையில் கேரளா போலீசார் கைது செய்துள்ளனர். இவர் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் ஒன்றரை ஆண்டுகளாக புதிய படங்களை பதிவேற்றம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் இணையதளத்தில் புதிய படம் ஒன்றை பதிவேற்றம் செய்ய ரூ.5000 கமிஷன் பெறப்பட்ட நிலையில் தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Similar News
News March 5, 2026
மதுரை : 108 ஆம்புலன்ஸ் புக்கிங் செய்ய இனி Whatsapp..!

தமிழ்நாடு அரசின் 108 ஆம்புலன்ஸ் சேவையை வாட்ஸ்அப் மூலம் பெற அறிமுகம் செய்துள்ளது.
1. 94450 30725 எண்ணை சேமித்து ‘Hi’ என அனுப்பவும்.
2. Book Ambulance -ஐ தேர்வு செய்து உங்கள் (Location) பகிரவும்.
3. கட்டுப்பாட்டு மையம் உடனே உங்களைத் தொடர்புகொண்டு ஆம்புலன்ஸ் தகவலை வழங்கும்.
அவசர தேவை எண்ணை உங்க போனில் Save பண்ணுங்க..இந்த எண்ணை அனைவரும் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க…
News March 5, 2026
மதுரை: VAO லஞ்சம் வாங்கினால் என்ன செய்யலாம்.?

மதுரை மக்களே, பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது, வங்கிகள், கூட்டுறவு சங்கத்திடமிருந்து கடன் வாங்கி கொடுப்பது VAO-வின் வேலையாகும். இவற்றை முறையாக செய்யமால் அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்பு துறையில் (04546 – 255477) புகாரளிக்கலாம். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE செய்து உதவுங்க.
News March 5, 2026
மதுரை: மல்லிகை பூ விலை இனி அதிகரிக்கும்

மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் மல்லிகை பூ நேற்று (கிலோ) ரூ.1200 வரை விற்பனையானது மற்ற பூக்களின் நிலையம் கணிசமாக உயர்ந்தது. பிச்சிப்பூ ரூ.1000, முல்லை ரூ.900, கனகாம்பரம் ரூ.800, செவ்வந்தி ரூ.150, சம்பங்கி ரூ.150 சென்ட் மல்லி ரூ.60 வியாபாரி கூறும் போது; தற்போது வெயிலின் தாக்கம் உயர்ந்து வருவதால் பூக்களின் குறைந்துள்ளது. முகூர்த்த நாட்கள் வர உள்ளதால் மேலும் அதிகரிக்கும் என்றார்.


