News July 28, 2024
50,000 லிட்டர் கொள்ளளவில் நவீன பால் பண்ணை

கரூர் மாவட்டத்தில் 144 பிரதான பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் மூலம் ஒரு நாளுக்கு சராசரியாக, 17,025 லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இதையடுத்து ஆவின் பால் குளிரூட்டும் நிலையத்தில், புதிய பால் பண்ணை அமைத்திட ரூ.3.43 கோடி நிதி ஒதுக்கப்பட்டு தற்போது அதன் பணிகள் நிறைவு பெற்றுள்ளது. எனவே 50,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட நவீன பால் பண்ணை திறப்பதற்கு தயாராக உள்ளதென ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News March 3, 2026
கரூர்: தேர்வு இல்லாமல் அரசு வேலை!

இந்தியா முழுவதும் உள்ள ஆதார் சேவை மையங்களில் காலியாக உள்ள ஆபரேட்டர் (Operator) மற்றும் சூப்பர்வைசர் (Supervisor) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 252
3. வயது: 18 வயது பூர்த்தியடைந்தவர்
4. சம்பளம்: ரூ.20,000
5. தகுதி: 12ஆம் வகுப்பு
6. கடைசி தேதி: 10.03.2026
7. <
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News March 3, 2026
கரூரில் பரிசு வழங்கிய செந்தில் பாலாஜி!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 73-வது பிறந்தநாளை முன்னிட்டு, கரூர் வடக்கு மாநகரப் பகுதியில் எம்எல்ஏ செந்தில் பாலாஜி 73 கிலோ மெகா கேக் வெட்டிக் கொண்டாடினார். தொடர்ந்து, வார்டுகளுக்கிடையே நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு அவர் பரிசுகளை வழங்கிக் கௌரவித்தார். இந்நிகழ்வில் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பெரும் திரளானோர் கலந்து கொண்டனர்
News March 3, 2026
கரூரில் தீயில் கருகிய நிலையில் பெண் சடலம் மீட்பு!

வேலாயுதம்பாளையம் செம்பாடாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஜாஸ்லி அன்பரசி (47), வீட்டின் அருகே உள்ள காலி இடத்தில் தீக்காயங்களுடன் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். இவரது கணவர் ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் உடலைக் கைப்பற்றி கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். கணவர் இறந்த துக்கத்தில் தற்கொலையா அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீசார் விசாரணை.


