News July 27, 2024
காசாவில் பள்ளி மீது தாக்குதல்: 30 பேர் பலி

மத்திய காசாவில் உள்ள பள்ளி மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. தாக்குதலில் 30 பேர் உயிரிழந்ததாக பாலஸ்தீன சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. படுகாயமடைந்த பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் கூறியுள்ளது. தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருவதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
Similar News
News December 3, 2025
ஒரே நாடு, ஒரே தேர்தல்: தேர்தல் கமிஷனரிடம் ஆலோசிக்க முடிவு

‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மசோதா பற்றி ஆலோசிக்க ஞானேஷ் குமாருக்கு பார்லி., கூட்டு குழு அழைப்பு விடுத்துள்ளது. இத்திட்டத்திற்கு திமுக உள்ளிட்ட முக்கிய கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில், இதனை நடைமுறைப்படுத்த மத்திய அரசு தீவிரமாக உள்ளது. இந்நிலையில், இவ்விவகாரத்தில் EC-க்கு வழங்க வேண்டிய அதிகாரத்தின் அளவு விவாதத்தின் மையப்புள்ளியாக மாறியுள்ளதால் ஞானேஷ் குமாருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
News December 3, 2025
கூட்டணிக்கு Plan B-ஐ கையில் வைத்திருக்கிறதா காங்கிரஸ்?

திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த குழு அமைத்தது காங்கிரஸ். இதனால் ஆளும் தரப்பும் ஆசுவாசமானது. ஆனால், திமுகவுக்கு தெரியாமல் தவெகவுடன் கூட்டணி அமைப்பது பற்றி சீக்ரெட்டாக காங்., ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. இதற்காக அறிவிக்கப்படாத அணி ஒன்று தீவிரமாக இயங்கி வருகிறதாம். கேட்கும் சீட்டை கொடுக்கவில்லை எனில் மீண்டும் கூட்டணியில் குழப்பம் வெடிக்கலாம் என பேசப்படுகிறது.
News December 3, 2025
கூட்டணிக்கு Plan B-ஐ கையில் வைத்திருக்கிறதா காங்கிரஸ்?

திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த குழு அமைத்தது காங்கிரஸ். இதனால் ஆளும் தரப்பும் ஆசுவாசமானது. ஆனால், திமுகவுக்கு தெரியாமல் தவெகவுடன் கூட்டணி அமைப்பது பற்றி சீக்ரெட்டாக காங்., ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. இதற்காக அறிவிக்கப்படாத அணி ஒன்று தீவிரமாக இயங்கி வருகிறதாம். கேட்கும் சீட்டை கொடுக்கவில்லை எனில் மீண்டும் கூட்டணியில் குழப்பம் வெடிக்கலாம் என பேசப்படுகிறது.


