News July 27, 2024
நீதிமன்றம் கட்டுவதற்கான இடத்தை நீதிபதி நேரில் ஆய்வு

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இன்று மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் மற்றும் குடியிருப்பு கட்டிடம் கட்டுவதற்காக இடத்தை தேர்வு செய்யும் பணியினை சென்னை உயர்நீதிமன்ற நீதி அரசர் சுப்ரமணியன் பட்டு தேவானந்தா நேரடியாக பார்வையிட்டு ஆய்வு செய்தனர். உடன் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி மீனா குமாரி மற்றும் பலர் உள்ளனர்.
Similar News
News July 7, 2025
ஆம்பூரில் 4 கைத்துப்பாக்கி வைத்திருந்த நபர் கைது

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் கம்பிக்கொல்லை பகுதியை சேர்ந்த ஆசிப் என்ற இளைஞர் வேலூரில் உள்ள தனது சகோதரி வீட்டில் 4 கைத்துப்பாக்கியை மறைத்து வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் இன்று (ஜூலை 06) ஆசிப்பை ஆம்பூர் நகர போலீசார் கைது செய்து அவரது சகோதரி வீட்டிலிருந்து 4 கைத்துப்பாகிகளை பறிமுதல் செய்தனர்.
News July 6, 2025
இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி, வாணியம்பாடி, ஆம்பூர் உள்ளிட்ட காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இன்று (ஜூலை 6) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசா விவரங்களை மாவட்ட காவல்துறையினர் தொலைபேசி எண்ணுடன் அறிவித்துள்ளனர். இரவு நேரங்களில் நடக்கும் அசம்பாவிதங்கள் மற்றும் குற்றங்கள் குறித்து பொது மக்கள் மேற்கண்ட போலிசாருக்கு தகவல் தெரிவிக்கலாம்.
News July 6, 2025
உள்ளூரில் கிராம உதவியாளர் வேலை

2,299 கிராம உதவியாளர் (Village Assistant) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 10ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும். ரூ.11,100 – ரூ.35,100 வரை சம்பளம் வழங்கப்படும். வரும் செப்.2ஆம் தேதி தேர்வு நடைபெறும். விருப்பம் உள்ளவர்கள் வரும் ஆகஸ்ட் 4ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க. <<16962559>>தொடர்ச்சி<<>>