News July 27, 2024
பெண் மீது 42 சாராய வழக்குகள்!

கடலூர் வசந்த ராயன் பாளையத்தை சேர்ந்தவர் புனிதா. கடந்த ஜூன் 27-ஆம் தேதி இவரது வீட்டில் பதுக்கி வைத்திருந்த சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் விசாரித்ததில் முதுநகர் காவல் நிலையத்தில் இவர் மீது 42 சாராய வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது. இவரது நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு தடுப்பு காவலில் கைது செய்து சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
Similar News
News March 7, 2026
அரசுக்கு கண்டனம் தெரிவித்த MLA

பண்ருட்டி MLA வேல்முருகன் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், தமிழக கேரள எல்லைப் பகுதியில், கூடலூர் அருகே தமிழக அரசின் ஒப்புதலின்றி கேரள அரசு ஒருதலைப்பட்சமாக எல்லை அறிவிப்புப் பலகைகளை நட்டுள்ள செய்தி, பேரதிர்ச்சியையும் மிகுந்த மனவேதனையையும் அளிக்கிறது. அண்டை மாநிலங்கள் பேண வேண்டிய கண்ணியத்தையும், ஜனநாயக மரபுகளையும் காலில் போட்டு மிதிக்கும் இச்செயலை தவாக வன்மையாகக் கண்டிக்கிறது என தெரிவித்தார்.
News March 7, 2026
விருத்தாசலம் டிஎஸ்பி-க்கு சான்றிதழ் வழங்கிய எஸ்பி

கடலூர் மாவட்டத்திலேயே குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களை விரைந்து பிடிப்பதில் சிறந்த போலீஸ் நிலைய உட்கோட்டமாக விருத்தாசலம் உட்கோட்டமும், சிறந்த போலீஸ் நிலையமாக விருத்தாசலம் போலீஸ் நிலையமும் தேர்ந்தெடுக்கப்பட்டது. இதையடுத்து மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் நேற்று விருத்தாசலம் டி.எஸ்.பி. பாலகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் பிரதாப் சந்திரன் ஆகியோரை பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.
News March 7, 2026
கடலூர்: உங்க போனுக்கு தேவை இல்லாத CALL வருகிறதா?

கடலூர் மக்களே, உங்கள் போனுக்கு அடிக்கடி கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவை இல்லாத அழைப்புகள் வருகிறதா? இதனை தடுக்க ‘1909’ என்ற எண்ணை தொடர்பு கொண்டு ‘DO NOT DISTURB’ என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்தால் போதும். அதுபோல 1909 என்ற எண்ணுக்கு ‘START 0’ அல்லது ‘START 1’ என SMS அனுப்புவதன் மூலமாகவும் கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவையற்ற அழைப்புகளை உங்களால் தடுக்க முடியும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!


