News July 27, 2024

நீரில் மூழ்கி ஒன்றரை வயது குழந்தை பலி

image

குமரி மாவட்டம், வேர்க்கிளம்பியை அடுத்த கல்லன்குழியை சேர்ந்த நிம்மி வி.எம்.ஜோஷி(30), நாகர்கோவில். ஐடி நிறுவனத்தில் வேலை செய்கிறார். இவரது ஒன்றரை வயது குழந்தை கெவின் சுமித் நேற்று காலை வீட்டில் விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது, வீட்டு முன் இருந்த ஸ்டீல் பாத்திரத்தில் இருந்த நீரில் மூழ்கி இறந்து போனான். சம்பவம் குறித்து திருவட்டாறு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News

News August 14, 2025

குஞ்சன் விளையில் 26 மது பாட்டில்கள் சிக்கியது

image

சுசீந்திரம் சப் இன்ஸ்பெக்டர் லிபி பால்ராஜ் குஞ்சன் விளை பகுதியில் திருட்டுத்தனமாக மது பாட்டில்கள் விற்கப்படுவதாக கிடைக்கத் தகவலின் பெயரில் நேற்று அந்தப் பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தார். அப்போது லிங்கபிரபு என்பவர் 26 மதுபாட்டில்களை விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து அதை பறிமுதல் செய்த சப் இன்ஸ்பெக்டர் இது தொடர்பாக நேற்று வழக்குப் பதிவு செய்துள்ளார்.

News August 13, 2025

102 உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் 52,098 மனுக்கள்

image

பத்மநாபபுரம் லெட்சுமி மஹாலில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமற்கு இன்று நேரில் சென்று, அவர்களுக்கு ஒப்புகை சீட்டு வழங்கப்பட்டு வருவதை பார்வையிட்டு மாவட்ட ஆட்சியர் அழகுமீனா ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் மாவட்டத்தில் ஜூலை.15 முதல் ஆக.12 வரை 102 முகாம்கள் நடத்தப்பட்டு அதில் 52,098 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. பொதுமக்கள் முகாமை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

News August 13, 2025

குமரியில் அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி

image

ஆலங்கோடு அருகே சரல்விளையை சார்ந்தவர் சுஜி(34).இவர் 100 நாள் வேலை பார்த்து வருகிறார். இவரிடம் மூன்று பேர் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.10 லட்சம் வாங்கியுள்ளனர். பின்னர் வேலை வாங்கிக் கொடுக்காததால் அந்தப் பணத்தை சுஜி கேட்ட நிலையில் அவரை ஆபாசமாக பேசி மிரட்டியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக தக்கலை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!