News July 27, 2024

ஆம்ஸ்ட்ராங் கொலையின் முக்கிய குற்றவாளி?

image

பகுஜன் சமாஜ் மாநில செயலாளராக இருந்த ஆம்ஸ்ட்ராங் சென்னையில் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், முக்கிய குற்றவாளியான பிரதீப் நேற்று(ஜூலை 26) கைது செய்யப்பட்டார். பெரம்பூரை சேர்ந்தவர் பிரதீப். இவர் கொடுத்த துல்லியமான தகவல்களே இப்படுகொலைக்கு பெருமளவு உதவியதாக கூறப்படுகிறது. கடந்தாண்டு கொலை செய்யப்பட்ட ஆற்காடு சுரேஷ், பிரதீப்புக்கு சித்தப்பா முறை வேண்டும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

Similar News

News March 11, 2026

சென்னை: ஆதார் அட்டை வைத்துள்ளோர் கவனத்திற்கு!

image

சென்னை மக்களே, ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி இ-சேவை மையத்திற்கு செல்ல வேண்டாம். எந்த அலைச்சலும் இல்லாமல், வீட்டில் இருந்தபடியே இங்கே <>கிளிக் <<>>செய்து மாற்றம் செய்து கொள்ளலாம். மேலும், ஆதார்-பான் இணைப்பு, KYC செயல்முறையும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள SHARE பண்ணுங்க.

News March 11, 2026

சென்னை: குளிர்சாதன பேருந்து சேவை தொடக்கம்

image

சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் புதிய தாழ்த்தள மின்சார ‘குளிர்சாதன ப்ரீமியம் பேருந்து’ சேவையை இன்று(மார்ச் 11) தொடங்கி வைக்கிறார் அமைச்சர் சிவசங்கர்., தண்டையார்பேட்டை பேருந்து பணிமனையில் புதிய தாழ்தள மின்சார குளிர்சாதன பிரீமியம் பேருந்து சேவை தொடங்கப்படுகிறது. இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

News March 11, 2026

பெரும்பாக்கம்: தாய், மகள் துடிதுடித்து பலி!

image

சென்னை: பெரும்பாக்கம், சேகரன் நகரை சேர்ந்தவர் புனீஷ் (38). இவரது மனைவி லாவண்யா (35). இவர்களின் மகள் இனியா (13), பெரும்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வந்தார். நேற்று(மார்ச் 10) காலை பைக்கில் மகளை பள்ளிக்கு அழைத்து சென்ற போது, அதிவேகமாக வந்த லாரி பைக் மீது மோதியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது

error: Content is protected !!