News July 27, 2024
ரோகிணியில் பிறந்தவர்கள் சொல்ல வேண்டிய மந்திரம்

“ஆபதத்ரி பேத டங்க ஹஸ்ததே நம: சிவாய பாப ஹாரி திவ்ய ஸிந்து மஸ்ததே நம: சிவாய பாப தாரிணே லஸன்ந மஸ்ததே நம: சிவாய சாப தோஷ கண்டன ப்ரசஸ்ததே நம: சிவாய” ஆதிசங்கரர் அருளிய இந்த சிவ பஞ்சாட்சர ரோகிணி நட்சத்திர ஸ்லோகத்தை திருநாள், சிவராத்திரி, பிரதோஷம் உள்ளிட்ட நாள்களில் , உடல் & மன சுத்தியுடன் 4 முறை பாடி, வில்வம் சமர்ப்பித்து சிவபெருமானை வழிபட கஷ்டங்கள் விலகும்; எண்ணியது ஈடேறும் என்பது ஐதீகம்.
Similar News
News March 8, 2026
எழுதாத பேனாவுக்கு சிலை எதற்கு? EPS

எழுதாத பேனாவுக்கு கடலில் ₹82 கோடியில் சிலை வைக்க முயற்சிக்கின்றனர். எழுதாத பேனாவுக்கு சிலை எதற்கு என EPS கேள்வி எழுப்பியுள்ளார். அதேபோல, கார் பந்தயத்துக்கு ₹100 கோடிக்கு மேல் செலவு செய்துள்ளதாக கூறிய அவர், மக்கள் வரிப்பணத்தை ஊதாரித்தனமாக இந்த அரசு செலவிட்டுள்ளது எனவும் விமர்சித்துள்ளார். மேலும், திமுக அரசை அகற்றுவதுதான் மக்களின் கனவு எனவும் பேசியுள்ளார்.
News March 8, 2026
இந்த App உங்க ஃபோன்ல இருக்கா? முடிஞ்சுது போங்க!

ஓடிடி-யில் படம் பார்ப்பது வாடிக்கையாகிவிட்டதால் இதற்காகவே நெட்பிளிக்ஸ், ப்ரைம் அக்கவுண்ட்டுகளுக்கு பணம் செலுத்தி வாங்க வேண்டியிருக்கிறது. ஆனால் இதற்கு பணம் செலுத்த முடியாதவர்கள், அதில் வரும் படங்களை இலவசமாக பார்க்கவேண்டும் என்பதற்காக Playstore-ல் இல்லாத ‘Net Mirror’ போன்ற செயலிகளை பதிவிறக்கம் செய்கின்றனர். இதுபோன்ற செயலிகள் உங்கள் ஃபோனை ஹாக் செய்வதோடு அதிலுள்ள தகவல்களை திருடலாம். உஷார்!
News March 8, 2026
கூட்டணி விவகாரத்தில் கோட்டை விட்ட தவெக!

பவர் ஷேரிங் ஆப்சனை கொடுத்தும் எந்த கட்சியும் நம்முடன் வராதது ஏன் என மூத்த நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. விஜய்க்கு ஆதரவாக பேசிவந்த TTV தினகரன் முதல் ‘நம்ம வீட்டு பிள்ளை’ என பேசிய பிரேமலதா வரை எதிரெதிர் அணியில் ஐக்கியமாகினர். கடைசி வரை பேசி வந்த காங்கிரஸும் திமுகவுடன் ஒப்பந்தத்தை இறுதி செய்துவிட்டது. இதனால், நாம் கோட்டை விட்டது எங்கே என விஜய் விளக்கம் கேட்டுள்ளாராம்.


