News July 27, 2024

நிலுவையில் 5 கோடிக்கும் அதிகமான வழக்குகள்

image

நாடு முழுவதும் நீதிமன்றங்களில் 5 கோடிக்கும் அதிகமான வழக்குகள் நிலுவையில் உள்ளதாக மத்திய சட்டத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மக்களவையில் இது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், உச்ச நீதிமன்றத்தில் மட்டும் 84,045 வழக்குகளும், பல்வேறு உயர்நீதிமன்றங்களில் 60.11 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் தெரிவித்தார். இதில் அதிகபட்சமாக உ.பி.,யில் 1.18 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தெரிவித்தார்.

Similar News

News March 11, 2026

இப்படி கூட கேஸ் மிச்சம் பண்ணலாம்

image

சமையலின் போது கேஸ் மிச்சப்படுத்துவதற்கான சில ட்ரிக்ஸ் *குக்கரில் முதல் விசில் அடித்தவுடன் தீயை மீடியம் பிளேமிற்கு மாற்றவும் *குக்கரில் 2-3 அடுக்குகள் பயன்படுத்தி ஒரே நேரத்தில் சாதம், பருப்பு, காய்கறிகளை வேக வைக்கலாம் *சிறிய பர்னரை உபயோகிக்கவும் *பிரிட்ஜில் இருந்த உணவுகளின் Chillness சற்று குறைந்த பிறகு சூடுபடுத்தவும் *கொண்டைக்கடலை, அரிசி, பருப்பு ஆகியவற்றை ஊறவைத்து பிறகு சமைக்கவும்.

News March 11, 2026

நடிகர் சீனிவாசன் காலமானார்.. சோகமான தகவல்

image

நடிகர், இயக்குநர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்ட <<19351093>>தக்காளி சீனிவாசனை<<>> தமிழ் சினிமா இழந்துள்ளது. நீண்ட கால உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவரது உயிரை எமன் பறித்துச் சென்றார். தனது இறுதிக் காலத்தை பெங்களூருவில் கழித்த அவர், ஆசிரமம் நடத்தி பல குழந்தைகளை தத்தெடுத்து மனிதநேய சேவையாற்றி வந்தார். தற்போது, சீனிவாசனை இழந்து ஆசிரம குழந்தைகள் சோகத்தில் மூழ்கியிருப்பது பெரும் வேதனை.

News March 11, 2026

போர் கொடூரம்: தனித்து விடப்படும் வாயில்லா ஜீவன்கள்!

image

போருக்கு மத்தியில் வீடுகளை காலி செய்யும் மக்கள், தங்களது செல்லப்பிராணிகளை கைவிட்டு செல்லும் கொடூரம் துபாயில் அரங்கேறி வருகிறது. நேற்றுவரை அரவணைத்த கைகள் எங்கு சென்றன என்பது புரியாமல் பசியிலும், பயத்திலும் அவை தவிக்கின்றன. யாராவது அரவணைத்து கொள்ள மாட்டார்களா என அவற்றின் கண்களில் தெரியும் ஏக்கம் நெஞ்சை உலுக்குகிறது. போரின் கொடூரம் மனிதர்களை மட்டுமல்ல, வாயில்லாத ஜீவன்களையும் காயப்படுத்தியுள்ளது.

error: Content is protected !!