News July 26, 2024
நாட்டின் பாதுகாப்பு அதிகரித்துள்ளது: ஆளுநர்

டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழத்தில் கார்கில் வெற்றி தினத்தை நினைவுகூரும் நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றார். பாதுகாப்பில் தன்னிறைவு அதிகரிப்பதாலும் , தனியார் துறையின் சக்தியைப் பயன்படுத்துவதாலும் நமது நாட்டின் பாதுகாப்பு உற்பத்தி மற்றும் ஏற்றுமதி அபரிமிதமாக அதிகரித்து வருகிறது என்று பேசினார்.
Similar News
News March 5, 2026
சென்னை இலவச சட்ட உதவி மையம்

சென்னை மாவட்டத்திற்கான இலவச சட்ட உதவி மையம், சென்னை ஐகோர்ட் நீதிமன்றத்தில் இயங்கி வருகிறது. நீங்கள், அங்கு சென்று சட்ட ஆலோசனைகளை இலவசமாக பெறலாம். சென்னை மாவட்ட இலவச சட்ட உதவி மையம் – 044-25332412, (தமிழ்நாடு) அவசர உதவி – 044–25342441, TOLL FREE – 1800 4252 441, சென்னை ஐகோர்ட் – 044-29550126, ஐகோர்ட் மதுரை கிளை – 0452-2433756 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுங்கள். அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள்.
News March 5, 2026
சென்னை: 2017-ல் குக்கர்… 2026-ல் விசிலா?

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை பிரதிநிதித்துவப்படுத்திய தொகுதி ஆர்.கே நகர் தொகுதி. 2017 இடைத்தேர்தலில் டி.டி.வி தினகரன் சுயேச்சையாக நின்று வெற்றி பெற்று இந்திய அரசியலையே அதிரவைத்த களம் இது. வடசென்னையில் உள்ள இந்தத் தொகுதியில் தொழிலாளர்கள் மற்றும் மீனவர்களின் வாக்குகள் அதிகம். 2026-ல் TVK வடசென்னையில் போட்டியிட்டால் ஆர்.கே. நகர் மீண்டும் ஒரு பெரிய போர்க்களமாக மாற வாய்ப்புள்ளது என பேசப்படுகிறது.
News March 5, 2026
சென்னை: நடிகை உடை மாற்றும் போது எட்டிப் பார்த்த நபர்

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியலில் நடித்து வரும் 31 வயதான நடிகை விருகம்பாக்கத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில், ஷூட்டிங் முடித்துவிட்டு வீட்டிற்கு வந்த நடிகை உடைமாற்றும் போது ஜன்னல் வழியாக பக்கத்து வீட்டில் வசிக்கும் நபர் பார்த்துவிட்டு தப்பி ஓடி விட்டதாக தெரிகிறது. நடிகை கொடுத்த புகாரின் பேரில் முன்னாள் ராணுவ வீரரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


