News July 26, 2024
பருப்பு வகைகளை அரசு கொள்முதல் செய்யும்

விவசாயிகளிடம் அனைத்து துவரம் பருப்பு, உளுந்து மற்றும் மைசூர் பருப்பு ஆகியவற்றை அரசே கொள்முதல் செய்யும் என, மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மாநிலங்களவையில் பேசிய அவர், இ சம்ரிதி தளத்தில், விவசாயிகள் தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றார். மேலும், காங்., ஆட்சியுடன் ஒப்பிடும்போது, விவசாயிகளிடம் தாங்கள் அதிக பொருட்களை கொள்முதல் செய்வதாகக் கூறினார்.
Similar News
News March 6, 2026
திமுக மீது அதிருப்தியில் இருக்கிறதா விசிக?

திமுக கூட்டணியில் உள்ள விசிக இம்முறை இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை பெற முயற்சித்து வருகிறது. ஆனால் அது சாத்தியமில்லை என திமுக நிராகரிப்பதால், தொகுதிகளை குறைத்தால் 1 ராஜ்யசபா சீட் வேண்டும் என டீலிங்கை மாற்றிப்பார்த்ததாம். ஆனால் விசிக கேட்ட 2 டிமாண்டுகளுக்கும் திமுக பிடிகொடுக்காமல் இருப்பதால் விசிக கடும் அதிருப்தியில் இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
News March 6, 2026
தங்கம் விலை மளமளவென குறைந்தது

அமெரிக்கா, இஸ்ரேல் – ஈரான் போரின் காரணமாக சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கமாக உள்ளது. தற்போதைய நிலவரப்படி 1 அவுன்ஸ் (28g) தங்கம் $88 (இந்திய மதிப்பில் ₹8,077) குறைந்து $5,089.47-க்கு விற்பனையாகிறது. அதேபோல வெள்ளியின் விலையும் $1 குறைந்து $83.04-க்கு விற்பனையாகிறது. இதனால், இந்திய சந்தையிலும் தங்கத்தின் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News March 6, 2026
திமுகவிடம் DCM பதவி கேட்டாரா பிரேமலதா?

தேமுதிகவுக்கு DCM பதவி வேண்டும் என திமுகவிடம் பிரேமலதா கேட்டதாகவும், இதனால்தான் கூட்டணி தாமதமானது எனவும் சமீபகாலமாக தகவல் பரப்பப்பட்டு வந்தது. அதற்கு மறுப்பு தெரிவித்த பிரேமலதா விளக்கமும் அளித்திருக்கிறார். தாங்கள் இது வேண்டும், அது வேண்டும் என்று யாரிடமும் அடம் பிடித்தது கிடையாது எனவும், மற்ற கட்சிகளை போலவே தங்களுக்கான உரிய இடத்தை தாங்கள் கேட்டதாகவும் கூறியுள்ளார்.


