News July 26, 2024
தமிழக வீரர்களுக்கு அநீதி: உதயநிதி

கேலோ இந்தியா திட்டத்தில் நிதி ஒதுக்குவதில் கடந்த 7 ஆண்டுகளாக மத்திய அரசு ஓரவஞ்சனையாக செயல்பட்டுள்ளதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். பாஜக ஆளும் உ.பி., குஜராத்துக்கு தலா ₹400 கோடி வழங்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் தமிழகத்திற்கு வெறும் ₹20 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், இது தமிழக விளையாட்டு வீரர்களுக்கு இழைக்கப்படும் அநீதி எனவும் கண்டித்துள்ளார்.
Similar News
News April 2, 2026
அபிஷேக் சர்மாவை கேப்டனாக்காதது ஏன்? யுவராஜ்

SRH கேப்டன்சியை அபிஷேக் சர்மாவுக்கு வழங்காததற்கு யுவராஜ் அதிருப்தி தெரிவித்துள்ளார். கடந்த 7 சீசன்களாக SRH அணிக்காக சிறப்பாகவும் அர்ப்பணிப்புடனும் விளையாடி வரும் அவருக்கு, நிச்சயமாக கேப்டன் பதவி வழங்கப்பட்டிருக்க வேண்டும் என யுவி கூறியுள்ளார். பஞ்சாப் மாநில அணிக்கு அவர் கேப்டனாக உள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளார். நடப்பு சீசனில் SRH அணியை இஷான் கிஷன் வழி நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
News April 2, 2026
அது ஹீரோயின் அல்ல, ஹெராயின்: நயினார்

ஒரு பாட்டுக்காக ஓட்டு வந்துவிடும் என திமுக கருதுகிறது என்றால், மக்களை எப்படி பார்க்கிறது என்று தெரியவில்லை என நயினார் நாகேந்திரன் பேசியுள்ளார். கடந்த 5 ஆண்டுகளில் TN-ல் கஞ்சா விற்பனை அதிகரித்துள்ளது. பள்ளிகள் முன் மிட்டாய் விற்ற காலம் போய், இப்போது கஞ்சா விற்கிறார்கள் என சாடியுள்ளார். இந்நிலையில் திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கை என்பது ஹீரோயின் அல்ல அது ஹெராயின் என்று விமர்சித்துள்ளார்..
News April 2, 2026
திங்கள்கிழமை பள்ளிகள் விடுமுறை.. கலெக்டர் அறிவிப்பு

நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் விழாவையொட்டி, புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏப்.6 (திங்கள்கிழமை) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம், பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்கள் இயங்காது. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இந்த அறிவிப்பு பொருந்தாது. அதேபோல், தேர்தலையொட்டி, ஏப்.7 முதல் 10 வரை புதுச்சேரி, காரைக்காலில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT


