News July 26, 2024

123 பயனாளிகளுக்கு கடன் உதவி வழங்கல்

image

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் இன்று தொழில் வணிக ஆணையத்தின் செயல்படுத்தப்படும் அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. சபாநாயகர் அப்பாவு, தமிழக சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் 123 பயனாளிகளுக்கு 47.20 கோடி ரூபாய் திட்ட மதிப்பில் 6.91 கோடி மானியத்துடன் கூடிய கடனுதவிகள் வழங்கப்பட்டது.

Similar News

News September 13, 2025

மாநகரில் இரவு காவல் பணி அதிகாரிகள் விபரம்

image

திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாத்தி மணி உத்தரவின் படி நெல்லை மாநகரில் இன்று (செப்டம்பர் 12) இரவு முதல் நாளை காலை 6 மணி வரை காவல் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் பெயர் விபரம் காவல் சரகம் வாரியாக மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் கைபேசி எண்ணும் தரப்பட்டுள்ளது. காவல் உதவி தேவைப்படுபவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரியை தொடர்பு கொள்ளலாம்.

News September 13, 2025

நெல்லை: இரவு ரோந்து பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள்

image

திருநெல்வேலி மாநகர இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி பாளை டவுன் தச்சை ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும் உதவி ஆய்வாளர்களும், இன்று [செப்.12] இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். உதவி ஆணையர் அசோக் குமார் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார். பொதுமக்கள் காவல் உதவிக்கு மேற்கண்ட தொலைபேசி நம்பரை தொடர்பு கொள்ளலாம்.

News September 12, 2025

கவின் கொலை வழக்கு; எஸ்ஐ ஜாமீன் மனு விசாரணை

image

பாளையங்கோட்டை கேடிசி நகரில் ஐடி பொறியாளர் கவின் ஆவண கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பு ஏற்படுத்தியது. இந்த வழக்கில் கைதான சப் – இன்ஸ்பெக்டர் சரவணன் ஜாமீன் கோரி நெல்லை மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார் இந்த மனு மீதான விசாரணை வருகிற 15ம் தேதி திங்கட்கிழமை நடைபெற உள்ளது. அன்று ஜாமீன் வழங்குவது குறித்து தெரிய வரும்.

error: Content is protected !!