News July 26, 2024
இணை சார் பதிவாளர் அலுவலகத்தில் சோதனை

விழுப்புரம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் நேற்று இரவு லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய ரெய்டில், கணக்கில் வராத ரூ.42 ஆயிரம் பணம் சிக்கியது. பத்திரங்களை பதிவு செய்ய லஞ்சம் வாங்குவதாக லஞ்ச ஒழிப்புக்கு தகவல் வந்தது. தொடர்ந்து 8 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்பு துறை குழுவினர் நேற்று இரவு திரு.வி.க., வீதியில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் நுழைந்து, சோதனை செய்தனர். சோதனையில் கணக்கில் வராத பணத்தை பறிமுதல் செய்தனர்.
Similar News
News July 10, 2025
விழுப்புரம் மலையனூர் கோயிலின் தல வரலாறு தெரியுமா உங்களுக்கு?

சிவன், பிரம்மனின் ஒரு தலையை கொய்ததால் பிரம்மஹத்தி தோஷத்தால் பீடிக்கப்பட்டார். தோஷத்தால் சிவனின் கையில் விழும் உணவை பிரம்ம கபாலம் புசிக்க துவங்கியது. இதனால் உண்ண ஏதும் கிடைக்காமல் சிவன் காடு, மலையெல்லாம் அலைந்து திரிந்தார். தேவி உணவுகளை மயானத்தில் சூறையிட கபாலம் சிவன் கையிலிருந்து வந்து தேவி கையில் அமர்ந்தது. தேவி அதனை தன் காலால் நசுக்கி மாலையாக்கி கழுத்தில் அணிந்து கொண்டார். ஷேர் பண்ணுங்க.
News July 10, 2025
பேருந்தில் மீதி சில்லறையை வாங்க வில்லையா? கவலை வேண்டாம்

பேருந்து பயணத்தில் ‘அப்றம் சில்லறையை வாங்கிக்கோங்கனு’ கன்டக்டர் சொன்ன நொடியில் இருந்து, மீதி சில்லறை கிடைக்குமோ கிடைக்காதோ என்ற பதற்றம் தொற்றிக்கொள்ளும். இனி அந்த கவலை வேண்டாம். ஒரு வேளை உங்களது மீது சில்லறையை வாங்காமல் இறங்கிவிட்டால் 18005991500-க்கு கால் பண்ணி உங்கள் டிக்கெட் விவரத்தை சொன்னால் போதும், உங்க காசை GPAY செய்து விடுவார்கள். மேலும் தகவலுக்கு(9445021208). *செம திட்டம் ஷேர் பண்ணுங்க*
News July 10, 2025
கலைஞர் கனவு இல்லம் திட்டம் 1/2

மக்களுக்கு வீடு வழங்கும் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் புதியாக 1 லட்சம் வீடுகள் கட்டப்பட உள்ளது. வீடு கட்ட ரூ.3.50 லட்சம் மானியம் வழங்கப்படும். வயதானோர்/ ஆதரவற்றோருக்கு அரசே கட்டுமான பணிகளை செய்து தருகிறது. இதற்கான KVVT survey குழுவினர் பயனாளிகளை தேர்வு செய்வார்கள். தனியாக விண்ணப்பிக்க விரும்பினால் ஊராட்சி மன்ற/ ஆட்சியர் அலுவலகத்தை (04146-222470) தொடர்பு கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க. <<17016119>>தொடர்ச்சி<<>>