News July 26, 2024
இணை சார் பதிவாளர் அலுவலகத்தில் சோதனை

விழுப்புரம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் நேற்று இரவு லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய ரெய்டில், கணக்கில் வராத ரூ.42 ஆயிரம் பணம் சிக்கியது. பத்திரங்களை பதிவு செய்ய லஞ்சம் வாங்குவதாக லஞ்ச ஒழிப்புக்கு தகவல் வந்தது. தொடர்ந்து 8 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்பு துறை குழுவினர் நேற்று இரவு திரு.வி.க., வீதியில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் நுழைந்து, சோதனை செய்தனர். சோதனையில் கணக்கில் வராத பணத்தை பறிமுதல் செய்தனர்.
Similar News
News August 27, 2025
விழுப்புரம்: வேலைவாய்ப்பு பற்றி புதிய அறிவிப்பு

விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள இரண்டாம் நிலை காவலர் சிறை காவலர் தீயணைப்பாளர் ஆகிய பதவிகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நாளை ஆகஸ்ட் 28 காலை 10 மணி முதல் பயிற்சி வகுப்பு நடக்க இருக்கிறது. எனவே விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் இலவச பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News August 27, 2025
விழுப்புரம்: விண்ணப்பிக்க ஆட்சியர் அறிவிப்பு

விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் குழந்தைகளுக்கான அவசர உதவி மையம் அமைக்கப்பட இருக்கிறது. இந்நிலையில் பல்வேறு பதவிகளுக்கு 42வயதிற்கு உட்பட்ட +2 தேர்ச்சி முதல் முதுகலை பட்டம் பெற்றவர்கள் வரை விழுப்புரம் மாவட்ட இணையதளத்தில் https://villupuram.nic.in பதிவிறக்கம் செய்து 15 தினங்களுக்குள் விண்ணப்பிக்கலாம் என விழுப்புரம் கலெக்டர் ஷேக் அப்துல் ரகுமான் செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார்.
News August 27, 2025
விழுப்புரம்: விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம்

விழுப்புரம் மாவட்டத்தில் ஆகஸ்ட் மாத விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் ஆகஸ்ட்-29ஆம் தேதி காலை 11 மணியளவில் விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற இருக்கிறது. இக்கூட்டத்தில் விவசாயிகள் சங்க பிரதிநிதிகளும், விவசாயிகளும் விவசாயம் சம்பந்தப்பட்ட கோரிக்கைகளை மனுவாக கொடுத்து பயன்பெறுமாறு விழுப்புரம் கலெக்டர் ஷேக் அப்துல் ரகுமான் அறிவுறுத்தியுள்ளார்.