News July 25, 2024
மின்கட்டண உயர்வை கண்டித்து பிரசுரங்கள் விநியோகம்

மின்கட்டணத்தை தொடர்ந்து உயர்த்தி மக்களையும் சிறு தொழில்களையும் அழிக்கும் முதலாளித்துவ பயங்கரவாதத்திற்கு எதிராக புரட்சிகர மக்கள் அதிகாரம், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பாக, தமிழகம் தழுவிய பிரச்சார இயக்கம் தருமபுரியில் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. இன்று தர்மபுரி நகரில் பேருந்து பிரச்சாரம் மற்றும் கடைவீதி பிரச்சாரங்கள் நடைபெற்றது.
Similar News
News April 10, 2026
தருமபுரி: 10th போதும்., ரூ.47,330 சம்பளத்தில் அரசு வேலை ரெடி!

தருமபுரி மக்களே மத்திய அரசின் நிலக்கரி நிறுவனமான NCL-ல் பல்வேறு பணியிடங்களில் மொத்தம் 577 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு 18 – 30 வயதுகுட்பட்ட 10th, டிப்ளமோ, நர்சிங் படித்தவர்கள் மே 1ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.43,775 – ரூ.47,330 வரை வழங்கப்படும். மேலும் பணி விவரம் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <
News April 10, 2026
தருமபுரி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு !

தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்றத் தொகுதிகளில் பெறப்பட்ட 128 வேட்புமனுக்களில், பரிசீலனை மற்றும் திரும்பப் பெறுதலுக்குப் பின் 83 பேர் இறுதி வேட்பாளர்களாகப் போட்டியிடுகின்றனர். பென்னாகரம் (22), அரூர் (14), தர்மபுரி (19), பாப்பிரெட்டிப்பட்டி (14) மற்றும் பாலக்கோடு (14) என மொத்தம் 83 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் திமுக, அதிமுக, பாமக தவெக மற்றும் சுயேச்சைகளும் போட்டியிடுகின்றனர்.
News April 10, 2026
பறக்கும் படையினர் பறிமுதல் செய்யப்பட்ட விவரங்கள்

சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி தேர்தல் அலுவலர்கள், பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில் 08.04.2026 காலை 6.00 மணி முதல் 09.04.2026 காலை 6.00 மணி வரை பறக்கும் படை குழு (FST) மற்றும் நிலையான கண்காணிப்புக்குழு (SST) வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது பறிமுதல் செய்யப்பட்ட விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.


