News July 25, 2024
சட்டப்பேரவையை முற்றுகையிட்டு போராட்டம்

புதுச்சேரி அங்கன்வாடி ஊழியர்கள் சங்கத்தினர் இன்று மாலை சட்டப்பேரவையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாத இறுதி நாளில் ஊதியம் வழங்க வேண்டும், ஏழாவது ஊதிய குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும், நிலுவையில் உள்ள போனஸ் மற்றும் பஞ்சப்படி போன்றவற்றை காலத்தோடு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
Similar News
News March 10, 2026
புதுவை: பெண் காவலர் மீது தாக்குதல்!

பெரியகடை காவல் நிலைய காவலர் ஜெய்சூர்யா. இவர் புதுவை கடற்கரை பாதுகாப்பு பணிக்கு சென்றபோது நேரு சிலை அருகே கடைக்காரர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அவர்களை சமாதானம் செய்த ஜெயசூர்யாவை அங்கு கடை நடத்திவந்த சோலை நகர் மணி, அவரது மனைவி சந்தியா மற்றும் குப்பு ஆகியோர் திட்டி, தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பெரியகடை போலீசார் மணி, சந்தியா, குப்பு ஆகியோர் மீது வழக்கு பதிந்து அவர்களை தேடி வருகின்றனர்.
News March 10, 2026
புதுவை: பெண் காவலர் மீது தாக்குதல்!

பெரியகடை காவல் நிலைய காவலர் ஜெய்சூர்யா. இவர் புதுவை கடற்கரை பாதுகாப்பு பணிக்கு சென்றபோது நேரு சிலை அருகே கடைக்காரர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அவர்களை சமாதானம் செய்த ஜெயசூர்யாவை அங்கு கடை நடத்திவந்த சோலை நகர் மணி, அவரது மனைவி சந்தியா மற்றும் குப்பு ஆகியோர் திட்டி, தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பெரியகடை போலீசார் மணி, சந்தியா, குப்பு ஆகியோர் மீது வழக்கு பதிந்து அவர்களை தேடி வருகின்றனர்.
News March 10, 2026
புதுவை: என்.ஆர்.காங்கிரஸில் இணைந்த மாற்றுக்கட்சியினர்

காரைக்கால் வடக்கு தொகுதி கீழகாசாக்குடி, காளியம்மன் கோவில் தெரு, காலனி தெரு, வடக்கு தெரு மற்றும் தெற்கு தெருவை சார்ந்த இளைஞர்கள் மாற்றுக் கட்சியில் இருந்து விலகி N.R.காங்., கட்சியில் இணைந்தனர். மாநில துணை தலைவர் மற்றும் அமைச்சர் திருமுருகனை அவரது அலுவலகத்தில் சந்தித்து தங்களை N.R.காங்கிரஸ் கட்சியில் இணைத்துக் கொண்டனர்.


