News July 25, 2024
நீலகிரியில் மின் உற்பத்தி அதிகரிப்பு!

நீலகிரி மாவட்டத்தில் மின்வாரியம் கட்டுப்பாட்டில் 13 அணைகள் உள்ளன. இதில் குந்தா, பைக்காரா நீர்மின் திட்டங்கள் மூலம் 12 மின்நிலையங்களில் மின்சார உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிலையில், தென்மேற்கு பருவமழையால் அணைகள் நீர்மட்டம் அதிகரித்து மின் உற்பத்தியும் அதிகரித்துள்ளது. நீலகிரியில் தற்போது 500 மெகாவாட் வரை மின் உற்பத்தி நடைபெறுவதாக குந்தா மின் உற்பத்தி அதிகாரி பிரேம்குமார் தெரிவித்துள்ளார்.
Similar News
News March 5, 2026
நீலகிரி: டேட்டிங் ஆப்-ல் இளம்பெண் மோசடி

நீலகிரியை சேர்ந்த அரசு அதிகாரி ஒருவர் டேட்டிங் செயலியில் அறிமுகமான பெங்களூருவை சேர்ந்த ஜெயஸ்ரீ ஸ்வேதா என்ற இளம் பெண்ணின் பேச்சில் நம்பிக்கை வைத்து ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தார். முதலில் ரூ.43 ஆயிரம் முதலீட்டில் லாபம் கிடைத்ததால், ரூ.20 லட்சம் வரை செலுத்தினார். பின்னர் பணம் திரும்ப கிடைக்காமல், தொடர்பும் துண்டிக்கப்பட்டதால், ஊட்டி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார்.
News March 5, 2026
நீலகிரி: பேருந்து நிலையத்தில் குடியேறிய போராட்டக்காரர்கள்

நீலகிரி: நெல்லியாளம் நகராட்சி செட்டிவயல் பகுதிக்கு சாலை வசதி கோரி 2வது நாளாக இன்றும் போராட்டம் தொடர்ந்தது. காலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்திருந்தனர். இன்று மாலை விடுதலை செய்யப்பட்ட போராட்ட குழுவினர், போராட்டத்தை கைவிடாமல் பந்தலூர் பேருந்து நிலையத்தில் குடியேறி மீண்டும் சாலை வசதி கேட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
News March 4, 2026
நீலகிரி: அரசின் குறைந்த விலையில் சொந்த வீடு! APPLY

நீலகிரி மக்களே, TNHB திட்டம் மூலம் மக்களுக்கு மானிய விலையில் சொந்த வீடு வாங்கும் கனவை அரசு நிறைவேற்றி வருகிறது. உங்க மாவட்டத்திலே சொந்த வீடு வேணுமா? 21 வயது நிரம்பி, எந்த சொத்தும் இல்லாதவர்களாக இருக்க வேண்டும். சம்பளம்: 25,000 – 70,000 வரை பெறுபவர்கள் <


