News July 25, 2024
இப்போது இல்லை என்றால் இனி எப்போதுமே இல்லை: தருண்தீப்

பாரிஸ் ஒலிம்பிக்ஸில் பதக்கம் வெல்லவில்லை என்றால் இனி எப்போதுமே அதற்கான வாய்ப்பு தனக்கு கிடைக்காதென இந்திய வில்வித்தை வீரர் தருண்தீப் ராய் (40) கூறியுள்ளார். ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்கள் இதுவே தங்களுக்கான கடைசி வாய்ப்பு என நினைத்து விளையாட வேண்டுமென கூறிய அவர், இது தனது 4வது ஒலிம்பிக் போட்டி என்றார். அத்துடன், இந்த முறை பதக்கம் வெல்வேன் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். <<-se>>#OLYMPICS<<>>
Similar News
News August 5, 2025
GOOD BYE அம்மா.. உருக்கமான தற்கொலை கடிதம்

‘அன்புள்ள குடும்பத்தினரே, இதை படிக்கும்போது அழ வேண்டாம். நான் ஏற்கனவே சொர்க்கம் சென்றிருப்பேன். உங்கள் அனைவரையும் மிஸ் பண்ணுகிறேன். GOOD BYE அம்மா.’ படிக்கும்போதே கண்ணீர் வரவழைக்கும் இந்த வரிகள் 14 வயதேயான சிறுவனின் தற்கொலை கடிதத்தில் இருந்தவை. பெங்களூருவில் 7-வது படிக்கும் சிறுவன், தனது அம்மா வெளியூர் சென்ற நேரத்தில் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளான். காரணம் குறித்து போலீஸ் விசாரித்து வருகிறது.
News August 5, 2025
ஆக.9, 11-ம் தேதிகளில் விசிக ஆர்ப்பாட்டம்: திருமா

ஆணவப்படுகொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்றக் கோரி விசிக சார்பில் வரும் 9, 11-ம் தேதிகளில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார். SC ஒரு வழக்கில் இக்கொலைகளை தடுக்க உரிய வழிமுறைகளை வலியுறுத்தி தீர்ப்பளித்தாகவும், ஆனால் அது நடைமுறைப்படுத்தவில்லை என்றார். மாநில அரசுகளுக்கு இச்சட்டத்தை இயற்ற அதிகாரமுள்ளதால் TN அரசு அனைத்து மாநிலங்களுக்கும் முன்மாதிரியாக இதனை இயற்ற கோரிக்கை விடுத்தார்.
News August 5, 2025
EX கவர்னர் காலமானார், CM ஸ்டாலின் இரங்கல்

ஜம்மு – காஷ்மீர், ஒடிசா உள்ளிட்ட பல மாநிலங்களில் கவர்னராக பணியாற்றிய சத்யபால் மாலிக் உடல்நலக்குறைவால் காலமானார். இந்நிலையில் அவரது உயிரிழப்பு மனவருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதிகாரத்துக்கு எதிராக உண்மையை பேச அவர் என்றுமே தயங்கியதில்லை என்றும், வரலாறு அவர் வகித்த பதவிகள் மட்டுமின்றி, அவர் எடுத்த நிலைப்பாடுகளையும் நினைவில் வைத்திருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.