News July 25, 2024
ஏன் இந்த பதற்றம்?: சு.வெங்கடேசன்

இருப்புப்பாதை அமைத்த பிறகு ரயிலை இயக்கும்படி, ரயில்வே அமைச்சகத்தை மதுரை எம்.பி சு.வெங்கடேசன் கிண்டல் செய்துள்ளார். இது குறித்து தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ரயில்வே திட்டங்களின் முழு விவரங்கள் அடங்கிய பிங்க் புக் இன்னும் வெளியாகவில்லை என்றார். ஆனால், நேற்றே ரயில்வே அமைச்சர் தொடங்கி அனைத்து அதிகாரிகளும் பிரசாரத்தை தொடங்கி விட்டதாக கூறிய அவர், ஏன் இந்த பதற்றம்? என கேள்வி எழுப்பியுள்ளார்.
Similar News
News December 1, 2025
எப்படி சுனாமி வருகிறது?

கடலுக்கு அடியில் உள்ள டெக்டானிக் பிளேட்கள் ஒன்றோடு ஒன்று மோதுவதால் நிலநடுக்கம் ஏற்படுகிறது. இதனால், கடல் சீற்றமடைந்து சுனாமி உருவாகிறது. பொதுவாக ரிக்டர் அளவில் 8.0 மேல் பூகம்பம் பதிவானால் மட்டுமே பெரியளவில் சுனாமி வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர். சுனாமி வருவதற்கு முன் கடல் நீர் 100-200 அடிகள் வரை உள்நோக்கி இழுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. SHARE.
News December 1, 2025
87 மொபைல் லோன் ஆப்களுக்கு தடை

இன்றைய காலகட்டத்தில் வங்கிகளை விட 3-ம் தரப்பு மொபைல் ஆப்கள் மூலம் கடன் வாங்கும் பழக்கம் மக்களிடையே அதிகரித்துள்ளது. ஆனால், இதில் பல முறைகேடுகளும் நடக்கின்றன. அந்த வகையில், சட்டவிரோதமாக கடன் வழங்கிய 87 ஆப்களை அரசு தடை செய்துள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்ஷ் மல்ஹோத்ரா இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். மேலும், ஆன்லைனில் கடன் வழங்கும் நிறுவனங்களை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் கூறியுள்ளார்.
News December 1, 2025
சமந்தா கல்யாணத்தில் இப்படி ஒரு ஸ்பெஷலா?

நடிகை சமந்தா, தயாரிப்பாளர் ராஜ் நிதிமோரு ஆகியோரின் திருமணம் ஈஷா மையத்தில் நடைபெற்றது. ‘பூதசுத்தி விவாஹா’ என்ற ஸ்பெஷலான முறையில் இவர்கள் திருமணம் நடைபெற்றுள்ளது. லிங்க பைரவி சன்னிதியில் வைத்து பஞ்சபூதங்கள் சுத்திகரிக்கப்பட்டு, தம்பதியர் இருவருக்குமான திருமண உறவு பிரதிஷ்டை செய்யப்படுவதே ‘பூதசுத்தி விவாஹா’ முறை. இது இருவர் இடையே ஆழமான பிணைப்பை ஏற்படுத்தும் என ஈஷா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


