News July 25, 2024

நில மோசடி வழக்கில் மேலும் ஒருவர் கைது

image

கரூரில் ₹100 கோடி மதிப்பிலான 22 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் மோசடி செய்த வழக்கில், சென்னையைச் சேர்ந்த மேலும் ஒருவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். இதற்கு முன்னதாக, முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், காவல் ஆய்வாளர் பிருத்விராஜ், பிரவீண் ஆகியோர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டனர். மோசடி தொடர்பாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உட்பட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Similar News

News March 5, 2026

மார்ச் 5: வரலாற்றில் இன்று

image

*1953 – சோவியத் யூனியனின் சர்வாதிகாரி ஸ்டாலின் நினைவு நாள் *1956 – நடிகை ஸ்ரீபிரியா பிறந்தநாள் *1958 – நடிகர் நாசர் பிறந்தநாள் *1959 – அரசியல்வாதி சிவ்ராஜ் சிங் சௌஹான் பிறந்தநாள் *1976 – இயக்குநர் செல்வராகவன் பிறந்தநாள் *2008 – இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கி. சிவநேசன் படுகொலை *2013 – நடிகை ராஜசுலோசனா நினைவு நாள்

News March 5, 2026

‘B-2 Bomber’ பின்னணியில் இந்திய வம்சாவளி

image

உலகிலேயே பயங்கர போர் விமானமான B-2 Bomber-ஐ ஈரான் மீது USA பயன்படுத்துகிறது. இதன் உருவாக்கத்தில் நோஷிர் கோவாடியா என்ற இந்திய வம்சாவளியின் பங்கும் உண்டு. 1944 மும்பையில் பிறந்த இவர், USA-ல் Aeronautical Eng படித்தார். பிறகு Northrop Grumman என்கிற போர் விமானங்களை உருவாக்கும் கம்பெனியில் பணியாற்றினார். ஆனால், இதுபற்றி சீனாவிற்கு தகவல் தந்ததாக USA கோர்ட் அவருக்கு 32 ஆண்டு சிறை தண்டனை விதித்தது.

News March 5, 2026

எங்குமே ஹிந்தியை திணிக்கவில்லை: எல்.முருகன்

image

தமிழ் மொழியை மட்டுமே TN-ல் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் நடைமுறைப்படுத்தி வருவதாக எல்.முருகன் தெரிவித்துள்ளார். <<19294297>>திருச்சி ரயில்வே அலுவலக சர்ச்சை<<>> குறித்த கேள்விக்கு, மத்திய அரசு எங்குமே ஹிந்தியை திணிப்பதில்லை எனக் கூறினார். தமிழ் தான் தொன்மையான மொழி என உலகம் முழுக்க PM மோடி பேசுவதாக குறிப்பிட்ட அவர், திமுக அரசு தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு எதுவுமே செய்யவில்லை என குற்றஞ்சாட்டினார்.

error: Content is protected !!