News July 25, 2024

காவல்துறையினர் வழக்கில் நீதிமன்றம் உத்தரவு

image

காவலர் முதல் இன்ஸ்பெக்டர் வரையிலான காவல்துறையினர் மீது தனிநபர் வழக்கு தொடர முன் அனுமதி தேவையில்லை என மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தங்களுக்கு எதிரான தனிநபர் வழக்குகளை ரத்து செய்ய கோரி ஏராளமான காவலர்கள் வழக்கு தொடுத்துள்ளனர். இந்த வழக்கில் DSP உள்ளிட்ட அரசு நடவடிக்கை எடுக்கும் பணி நிலையில் உள்ள காவல் அதிகாரிகள் மீதான வழக்குகளுக்கு மட்டுமே முன் அனுமதி தேவை என நீதிபதி விளக்கியுள்ளார்.

Similar News

News March 4, 2026

திருச்சி ரயில்வே அலுவலகத்தில் இந்தி.. சு.வெங்கடேசன் எதிர்ப்பு

image

புதிதாக கட்டி முடிக்கப்பட்ட திருச்சி மண்டல ரயில்வே அலுவலகத்தில் நுழைவு வாயிலுக்கு ‘கர்தவ்ய த்வார்’ என இந்தியில் பெயர் வைத்துள்ளதற்கு சு.வெங்கடேசன் MP கண்டனம் தெரிவித்துள்ளார். ‘கர்தவ்ய த்வார்’ என்றால் தமிழில் ‘கடமையின் நுழைவுவாயில்’ என்று பொருள் என குறிப்பிட்ட அவர், பாஜக அரசின் தற்போதைய ஒரே கடமை இந்தி திணிப்பு மட்டுமே என்றும் விமர்சித்துள்ளார். மேலும், தமிழில் பெயர் சூட்டவும் வலியுறுத்தியுள்ளார்.

News March 4, 2026

சர்ச்சை விவகாரம்.. முதல் முறையாக விஜய் பேசினார்

image

தஞ்சை தவெக நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டத்தில் ‘ஜன நாயகன்’ பட சென்சார் சர்ச்சை குறித்து முதல்முறையாக விஜய் மௌனம் கலைத்துள்ளார். கரூர் விவகாரம் முதல் ஜன நாயகன்’ வரை தன்மீது பழி மேல் பழி போடப்படுவதாக விஜய் தெரிவித்துள்ளார். மேலும், ‘ஜன நாயகன்’ ரிலீஸ் பிரச்னையில் தனக்காக ஆதரவாக குரல் கொடுத்தவர்களுக்கும், முக்கியமாக பூசி மெழுகி குரல் கொடுத்த CM ஸ்டாலினுக்கும் நன்றி எனவும் அவர் கூறியுள்ளார்.

News March 4, 2026

9 லட்சம் கோடி ரூபாய் சரிந்தது.. அச்சச்சோ

image

மத்திய கிழக்கிலுள்ள போர் பதற்றம் காரணமாக, இந்தியாவில் <<19293844>>பங்குச்சந்தை<<>> கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இன்று ஒருநாள் மட்டும் முதலீட்டாளர்கள் கிட்டத்தட்ட ₹9.5 லட்சம் கோடியை இழந்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. டாடா ஸ்டீல், Ultratech, இண்டிகோ போன்ற நிறுவனங்கள் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளன. அதே நேரத்தில், பாதுகாப்பு துறை பங்குகள் மட்டும் 5% – 13% வரை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!