News July 25, 2024
ஆணாதிக்க மனப்பான்மையின் வெளிப்பாடா?

‘நீ ஒரு பெண், உனக்கு எதுவும் தெரியாது’ என எம்.எல்.ஏ ரேகாதேவியைப் பார்த்து பிஹார் முதல்வர் நிதிஷ்குமார் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நிதிஷிடம் இருந்து வெளிப்பட்ட வார்த்தைகள் வெறும் எதிர்க்கட்சிக்கு எதிரானவை அல்ல என்றும் ஆண்டாண்டு காலமாய் ஆணாதிக்க மனப்பான்மையில் திளைத்துவரும் இந்திய சமூகத்தின் கோர முகத்தின் காட்சி எனவும் நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். உங்கள் கருத்து என்ன?
Similar News
News August 6, 2025
BREAKING: எம்எல்ஏ தோட்டத்தில் SI கொடூரமாக கொலை

மடத்துக்குளம் அதிமுக எம்எல்ஏ மகேந்திரன் தோட்டத்தில் காவல் உதவி ஆய்வாளர் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளனர். தோட்டத்தில் குடிபோதையில் ரகளை செய்வதாக வந்த புகாரை SI சண்முகசுந்தரம் விசாரிக்க சென்றுள்ளார். அப்போது எம்எல்ஏ தோட்டத்தில் பணியாற்றும் 2 பேர், SI-ஐ விரட்டி விரட்டி வெட்டி கொலை செய்துவிட்டு, தப்பிச் சென்றுள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸ், குற்றவாளிகளை தேடி வருகிறது.
News August 6, 2025
கூட்டணிக் கட்சிகள் குறித்து பேச திமுகவினருக்கு தடை

திமுக தலைமை அறிவுறுத்தலின்பேரில், மதுரை MP சு.வெங்கடேசன் & கூட்டணிக் கட்சிகளுக்கு எதிராக பேச திமுகவினருக்கு தடைவிதித்து மதுரை மாவட்டச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார். அரசியல் லாப நோக்கத்திற்காக சமரசம் செய்யப்படுவதாக ஆளும் கட்சியினர் குறித்து சு.வெ அறிக்கை வெளியிட்டதற்கு எதிராக திமுக நிர்வாகிகள் போர்க்கொடி தூக்கினர். இந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் திமுக தலைமை உத்தரவிட்டுள்ளது.
News August 6, 2025
இந்தியா மீதான வரி.. டிரம்ப்பை சாடிய முன்னாள் USA அதிகாரி

வரிவிதிப்பில் இறங்குகிறேன் என்ற பெயரில், நட்பு நாடான இந்தியாவின் உறவை கெடுத்துக் கொள்ள வேண்டாம் என டிரம்ப்பிற்கு, ஐநாவிற்கான முன்னாள் அமெரிக்க தூதர் நிக்கி ஹேலி அறிவுறுத்தியுள்ளார். ரஷ்யா மற்றும் ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் சீனாவிற்கு வரி விதிப்பில் இருந்து 90 நாள்கள் விலக்கு அளிக்கப்பட்டதையும் அவர் சாடியுள்ளார். மேலும், இது இந்தியாவை பகைமை அடையச் செய்யும் என்றும் எச்சரித்துள்ளார்.