News July 25, 2024
போலி பேராசிரியர்கள் குறித்து அறிக்கை கேட்ட ஆளுநர்

போலியாக பேராசிரியர்கள் பணிபுரிவதாக கணக்கு காட்டி, தனியார் பொறியியல் கல்லூரிகள் மோசடி செய்த விவகாரத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் பங்கு என்ன? என்று ஆளுநர் ரவி அறிக்கை கேட்டுள்ளார். அதே போல, மோசடியில் யார் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என விரிவான அறிக்கை சமர்ப்பிக்க, AICTE உத்தரவிட்டுள்ளது. 2022-23 கல்வியாண்டில் 211 பேராசிரியர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட கல்லூரிகளில் பதிவு செய்திருப்பது அம்பலமாகியுள்ளது.
Similar News
News August 6, 2025
BREAKING: எம்எல்ஏ தோட்டத்தில் SI கொடூரமாக கொலை

மடத்துக்குளம் அதிமுக எம்எல்ஏ மகேந்திரன் தோட்டத்தில் காவல் உதவி ஆய்வாளர் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளனர். தோட்டத்தில் குடிபோதையில் ரகளை செய்வதாக வந்த புகாரை SI சண்முகசுந்தரம் விசாரிக்க சென்றுள்ளார். அப்போது எம்எல்ஏ தோட்டத்தில் பணியாற்றும் 2 பேர், SI-ஐ விரட்டி விரட்டி வெட்டி கொலை செய்துவிட்டு, தப்பிச் சென்றுள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸ், குற்றவாளிகளை தேடி வருகிறது.
News August 6, 2025
கூட்டணிக் கட்சிகள் குறித்து பேச திமுகவினருக்கு தடை

திமுக தலைமை அறிவுறுத்தலின்பேரில், மதுரை MP சு.வெங்கடேசன் & கூட்டணிக் கட்சிகளுக்கு எதிராக பேச திமுகவினருக்கு தடைவிதித்து மதுரை மாவட்டச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார். அரசியல் லாப நோக்கத்திற்காக சமரசம் செய்யப்படுவதாக ஆளும் கட்சியினர் குறித்து சு.வெ அறிக்கை வெளியிட்டதற்கு எதிராக திமுக நிர்வாகிகள் போர்க்கொடி தூக்கினர். இந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் திமுக தலைமை உத்தரவிட்டுள்ளது.
News August 6, 2025
இந்தியா மீதான வரி.. டிரம்ப்பை சாடிய முன்னாள் USA அதிகாரி

வரிவிதிப்பில் இறங்குகிறேன் என்ற பெயரில், நட்பு நாடான இந்தியாவின் உறவை கெடுத்துக் கொள்ள வேண்டாம் என டிரம்ப்பிற்கு, ஐநாவிற்கான முன்னாள் அமெரிக்க தூதர் நிக்கி ஹேலி அறிவுறுத்தியுள்ளார். ரஷ்யா மற்றும் ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் சீனாவிற்கு வரி விதிப்பில் இருந்து 90 நாள்கள் விலக்கு அளிக்கப்பட்டதையும் அவர் சாடியுள்ளார். மேலும், இது இந்தியாவை பகைமை அடையச் செய்யும் என்றும் எச்சரித்துள்ளார்.