News July 25, 2024

அமித்ஷா மீது வழக்கு தொடர்வேன்: மூத்த வழக்கறிஞர்

image

தமிழக ஆளுநர் R.N.ரவியின் பதவிக்காலம் ஜூலை 31ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து அவருக்கு மீண்டும் ஆளுநர் பதவி வழங்கப்படுமா? என கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் துரைசாமி RTI சட்டத்தின் கீழ் மனு அனுப்பியுள்ளார். அதில், “அரசியலமைப்புச் சட்டத்தை மீறி, அவரை மீண்டும் அப்பதவியில் நியமித்தால், வழக்கு தொடர்வேன்” எனக் கூறியுள்ளார்.

Similar News

News March 30, 2026

விரலில் அடிபட்டா கைரேகை மாறுமா?

image

போன் Lock முதல் பயோமெட்ரிக் வரை இன்றியமையாததாக இருக்கும் கைரேகை கையில் அடிப்பட்டாலோ, தீக்காயம் ஏற்பட்டாலோ கைரேகை மாறுமா என்ற கேள்வி எழலாம். அறிவியலின் படி, ஆசிட் பட்டாலும் கைரேகை மாறாதாம். கருவில் உருவாகும் கைரேகை வாழ்நாள் முழுவதும் அப்படியே இருக்குமாம். உடல்எடை கூடியோ, குறைந்தாலோ ரேகையின் அளவு மாறுமே தவிர டிசைன் மாறாதாம். காயம் ஏற்பட்டு அழிந்தாலும் கூட, சில மாதங்களில் அதே டிசைனுடன் வளருமாம்.

News March 30, 2026

ஒரே நேரத்தில் பிரசாரத்தை தொடங்கிய ஸ்டாலின், விஜய்

image

கொளத்தூரில் ஸ்டாலினும், பெரம்பூரில் விஜய்யும் ஒரே நேரத்தில் வேட்புமனுவை தாக்கல் செய்துவிட்டு, ஒரே நேரத்தில் பிரசாரத்தையும் தொடங்கியுள்ளனர். பரப்புரை வாகனத்தில் பயணிக்கும் இருவரையும் மக்கள் வெள்ளம் சூழ்ந்துள்ளது. 2026 தேர்தலில் ஸ்டாலினுக்கும் தனக்கும் தான் போட்டி என விஜய் பேசியிருந்த நிலையில், 2 CM வேட்பாளர்களும் ஒரே நேரத்தில் களமிறங்கியுள்ளது TN அரசியலில் கவனத்தை ஈர்த்துள்ளது. <<-se>>#TNElection2026<<>>

News March 30, 2026

விஜய்க்கு எதிராக போட்டியிடும் திலகபாமா.. யார் இவர்?

image

விஜய் களமிறங்கும் பெரம்பூரில் PMK பொருளாளர் திலகபாமா போட்டியிடுகிறார். இவர் பல்வேறு தேர்தல்களில் போட்டியிட்டிருந்தாலும் இதுவரை வெற்றிபெற்றதில்லை. 2021-ல் ஆத்தூர் தொகுதியில் திமுகவின் ஐ.பெரியசாமியை எதிர்த்து போட்டியிட்ட அவரால் 30 ஆயிரம் வாக்குகளை கூட பெறமுடியாமல் டெபாசிட் இழந்தார். இந்த சூழலில் பரிச்சயம் இல்லாத பெரம்பூரில் திலகபாமாவை களமிறக்கி உள்ளதாக விமர்சகர்கள் கூறுகின்றனர். <<-se>>#TNElection2026<<>>

error: Content is protected !!