News July 25, 2024
நத்தம் தொகுதிக்கு விரைவில் அரசு கலைக்கல்லூரி

செம்பட்டி அருகே உள்ள கூட்டுறவு கலை அறிவியல் கல்லூரியில் 2024-2025ஆம் ஆண்டுக்கான வகுப்புகள் தொடக்க விழாவில் பங்கேற்ற ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி பேசியதாவது; தமிழக மாணவர்களில் கல்வித்தரம் உயர்ந்து வருகிறது. மேலும், திண்டுக்கலில் 6 அரசு கலை அறிவியல் கல்லூரிகள் உள்ளன.அதனுடன் நத்தம் தொகுதிக்கு புதிய அரசு கல்லூரி கொண்டுவரப்படும் என்றார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி உடனிருந்தார்.
Similar News
News March 6, 2026
திண்டுக்கல்: பீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது.இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம்
1. திண்டுக்கல் மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 0451-2460107
2. தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441
3. Toll Free 1800 4252 441
4.சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
5.உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News March 6, 2026
பழனியில் சிறுவர்களை தெரு நாய்கள் கடித்ததால் மருத்துவமனையில் அனுமதி

திண்டுக்கல் மாவட்டம் பழனி பெரிய பள்ளிவாசல் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 3 சிறுவர்களை தெரு நாய்கள் கடித்ததால் சிறுவர்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனை அனுமதி நகராட்சி நிர்வாகம் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்..
News March 6, 2026
நத்தம் அருகே விபத்து; ஒருவர் உயிரிழப்பு

சாணார்பட்டி அருகே உள்ள கொசவபட்டியை சேர்ந்தவர் இன்னாசி (65). இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனது மனைவி அமுதமேரியுடன் மோட்டார் சைக்கிளில் திண்டுக்கல் சென்று விட்டு மீண்டும் கொசவபட்டிக்கு வந்து கொண்டிருந்தார். விராலிப்பட்டி என்ற இடத்தில் வந்தபோது எதிரே வந்த கார் மோதியதில் படுகாயம் அடைந்தார். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இன்னாசி உயிரிழந்தார். அமுதமேரி சிகிச்சை பெற்று வருகிறார்.


