News July 25, 2024
அனைத்து மாவட்ட சுகாதாரத் துறைக்கும் பறந்த உத்தரவு

மனிதர்களை நாய்கள் கடிக்கும் சம்பவம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு இதுவரை மட்டும் தமிழகத்தில் 2.42 லட்சம் நாய்க்கடி சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில், விலங்குகளால் மனிதர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவும், நாய்கடி மருந்துகளை கையிருப்பு வைக்கவும் அனைத்து மாவட்ட சுகாதாரத்துறைக்கும் பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
Similar News
News March 10, 2026
இந்த நம்பரை அனைவரும் கண்டிப்பா தெரிஞ்சிக்கணும்!

MyGov உதவி மையத்தின் ‘+91-9013151515’ என்ற எண்ணை போனில் Save செய்யுங்கள் ➤இந்த எண்ணுக்கு WhatsApp-ல் ‘Hi’ என மெசேஜ் செய்யுங்கள் ➤அதில் வரும் கேள்விகளுக்கு பதிலளித்தால் உடனடியாக PAN Card, RC Book, License என டிஜிலாக்கரில் பதிவு செய்த எல்லாவற்றையும் இதன் மூலம் டவுன்லோடு செய்யமுடியும். இந்த முறையில் ஆவணங்களை பெற, முன்னதாக நீங்கள், DigiLocker-ல் அவற்றை பதிவேற்றம் செய்ய வேண்டியது அவசியம். SHARE.
News March 10, 2026
உரங்களுக்கு பற்றாக்குறை ஏற்படாது: FAI

வரவிருக்கும் காரீஃப்(june-nov) சாகுபடி பருவத்திற்கு போதுமான உரம் இருப்பு உள்ளதாக இந்திய உர கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. மார்ச் 6 நிலவரப்படி 177.31 லட்சம் டன்கள் கையிருப்பு இருப்பதாகவும், இதில் 59.30 லட்சம் டன் யூரியா, 25.13 லட்சம் டன் DAP & 55.87 NPKS லட்சம் டன் ஆகியவை அடங்கும் என்று தெரிவித்துள்ளது. இருப்பினும், எரிவாயு விநியோகம் குறைவது உள்நாட்டு யூரியா உற்பத்தியை பாதிக்கும் என்று கூறப்படுகிறது.
News March 10, 2026
FLASH: வெள்ளி விலை இன்று ₹10,000 உயர்ந்தது!

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹800 உயர்ந்த நிலையில், வெள்ளி விலையும் தாறுமாறாக அதிகரித்துள்ளது. இன்று ஒரு கிராம் வெள்ளியின் விலை ₹10 உயர்ந்து ₹300-க்கும், கிலோ வெள்ளி ₹10,000 உயர்ந்து ₹3,00,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு வாரத்திற்கு பின் வெள்ளி விலை மீண்டும் அதிகரித்ததால், நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


