News July 24, 2024
ஒரே நாளில் 6 பேர் மீது பாய்ந்த குண்டர் சட்டம்

மதுரை மாநகரில் தொடர் கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த இளமனூர் முத்துமணி (26), திருப்பரங்குன்றம் தமிழரசன் (22), தெற்கு வாசல் கணேஷ் பாண்டி என்ற கிஷோர் (23), காமராஜர் சாலை அருண்குமார் (22), சிவகங்கையைச் சேர்ந்த பூவந்தி குருமூர்த்தி (26), தென்பரங்குன்றம் சிங்கி ராஜா (22) ஆகிய 6 பேர் இன்று மாநகர காவல் ஆணையாளர் லோகநாதன் உத்தரவில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
Similar News
News March 10, 2026
BREAKING மதுரை: இளைஞர் அடித்துக் கொலை; 8 பேர் கைது

திருவாதவூர் திரௌபதி அம்மன் கோவில் திருவிழா முதல் மரியாதை தொடர்பாக மணிகண்டன்(36) மணி(53)க்கு இடையே தகராறு ஏற்பட்டது. நேற்றிரவு மணி சிலருடன் வந்து மணிகண்டனை தாக்கினார். இதை அவரது சகோதரர் அர்ஜுன்(32) உறவினர் அருணாச்சலம்(55) தடுத்தனர். கட்டை மற்றும் பாட்டில்களால் தாக்கப்பட்டதில் அர்ஜுன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலூர் போலீசார் மணி உட்பட 8 பேரை கைது செய்து இன்று விசாரிக்கின்bறனர்.
News March 10, 2026
மதுரை: ஆபத்தில் உணவகங்கள்; லட்சம் பேருக்கு வேலை இழப்பு

மதுரை உணவக உரிமையாளர்கள் சங்க நிர்வாகி குமார், சிலிண்டர் விநியோகம் இரு நாட்களுக்குள் சீரடையாவிட்டால் 3வது நாள் முதல் உணவகங்களை மூட நேரிடும் என எச்சரித்துள்ளார். இதனால் பொதுமக்கள் மூன்றாவது பொது முடக்கத்தை போன்ற பாதிப்புகளை எதிர்கொள்வதோடு, மதுரை மாவட்டத்தில் ஒரு லட்சம் பேர் வேலை இழக்க நேரிடும் என்றும் அவர் கூறினார். திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களிலும் இதே நிலை நீடிப்பதாக தகவல்.
News March 10, 2026
BREAKING மதுரை பிரபல ரவுடி கைது!

மேலூரை சேர்ந்த சுவாமிநாதன்(54) தனது இடத்தை ரூ.45 லட்சம் பெற்று ராதாகிருஷ்ணன் என்பவருக்கு கடன் பத்திரமாக கொடுத்தார். மீண்டும் அவ்விடத்தை பெற முயன்றதில் கிடைக்காததால், வரிச்சியூர் செல்வத்தை அணுகி ரூ.67 லட்சத்தை கொடுத்து தனது இடத்தை மீட்டு தரும்படி கேட்டார். அவர் அதை செய்யாததால் கோர்ட்டில் சாமிநாதன் வழக்கு தொடுத்தார். மேலூர் போலீசார் நேற்றிரவு செல்வத்தை கைது செய்து மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தினர்.


