News July 24, 2024

நான்காவது முனையமாகிறது பெரம்பூர்

image

சென்னையின் நான்காவது ரயில் முனையமாக பெரம்பூரை மாற்ற தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. வில்லிவாக்கத்தை நான்காவது முனையமாக மாற்றும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், நிலங்களை கையகப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து, பெரம்பூரை நான்காவது முனையமாக மாற்ற திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியை தெற்கு ரயில்வே தொடங்கியுள்ளது.

Similar News

News March 21, 2026

தவெக கூட்டணி… கடைசி நேரத்தில் மாற்றம்

image

TN சட்டப்பேரவைத் தேர்தலில் 5 முனைப்போட்டி உருவாகியுள்ளது. தவெகவுடன் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட சசிகலாவும், ராமதாஸும் கடைசி நேரத்தில் திடீர் திருப்பமாக புதிய கூட்டணியை உருவாக்கிவிட்டனர். இதனால், அந்த இருவரும் தவெகவுடன் கூட்டணி இல்லை என்பது உறுதியாகிவிட்டது. அதேபோல், கிருஷ்ணசாமியும் அதிமுகவுடன் கூட்டணியை பேசி முடித்துவிட்டதால், தவெக வரும் தேர்தலில் தனித்து களம் காண முடிவெடுத்துவிட்டதாம்.

News March 21, 2026

கரூரில் ஜன நாயகன் ஷூட்டிங்கா? தவெக பதில்

image

கரூர் அசம்பாவிதத்தின்போது ‘ஜன நாயகன்’ பட ஷூட்டிங் எடுக்கப்பட்டதாக சில <<19420433>>வீடியோக்கள் <<>>வைரலாகி ஹாட் டாபிக்காக மாறியது. இந்நிலையில், அடிப்படை அறிவு உள்ளவர்களுக்கு அங்கு ஷூட்டிங் நடந்ததா என்பது தெரியும் என்று CTR நிர்மல் குமார் பதிலளித்துள்ளார். அரசியல் காழ்ப்புணர்ச்சியால் புரோக்கர்கள் ஏதாவது பேசுவார்கள் என்ற அவர், இந்த விஷயத்தை தாங்கள் அரசியலாக்க மாட்டோம் என்றும் தெரிவித்துள்ளார்.

News March 21, 2026

ஒரே கோயிலில் 3 ரூபங்களில் காட்சி தரும் சிவன்

image

பிரம்மபுரீஸ்வரர், தோணியப்பர், சட்டைநாதர் என 3 ரூபங்களில் சீர்காழி சட்டைநாத சுவாமி கோயிலில் ஈசன் காட்சியளிக்கிறார். 3 அடுக்குகளைக் கொண்ட குன்றுக்கோயிலாக இக்கோயில் விளங்குகிறது. கீழ் தளத்தில் பிரம்மபுரீஸ்வரர், திருநிலை நாயகி அருள்பாலிக்கின்றனர். இது லிங்க மூர்த்தம் எனப்படும். நடு அடுக்கில், தோணியப்பர் உள்ளார். 3-வது தளத்தில் சட்டநாதராக இறைவன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

error: Content is protected !!