News July 24, 2024
முருகனடியார்கள் பெயரில் விருது பெற அழைப்பு

பழனியில் நடைபெறவுள்ள அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டில் தமிழ்க்கடவுள் முருகனின் பெருமைகளை உலகறியும் வகையில் பறைசாற்றியவர்களுக்கு 15 முருகனடியார்களின் பெயரில் வழங்கப்படும் விருதுகளுக்கு தகுதி வாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்கலாம் என இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். தகுதியுடையவர்கள் ஆகஸ்ட் 5ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
Similar News
News March 11, 2026
வத்தலக்குண்டு: தட்டித்தூக்கிய அதிமுக Ex அமைச்சர்!

வத்தலக்குண்டு மற்றும் பட்டிவீரன்பட்டி பகுதிகளை சேர்ந்த ஓ.பி.எஸ். ஆதரவாளர்களான ரத்தினம், முத்துச்சாமி, மணிப்பிள்ளை, ஓ.இளங்கோவன் மற்றும் சதீஷ்குமார் ஆகியோர் தலைமையில் அதிமுகவில் இணையும் விழா நடைபெற்றது. இந்நிகழ்வில், அதிமுக துணைப் பொதுச்செயலாளரும் முன்னாள் அமைச்சருமான இரா. விஸ்வநாதன் முன்னிலையில் அவர்கள் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர்.
News March 11, 2026
திண்டுக்கல்: ரூ.2,40,000 சம்பளத்தில் வேலை ரெடி! APPLY NOW

திண்டுக்கல் மக்களே, HPCL (இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்) நிறுவனத்தில் காலியாக உள்ள 730 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 18 – 45 வயதுகுட்பட்ட Diploma, Any Degree, B.E/B.Tech படித்தவர்கள் மார்ச் 25க்குள் <
News March 11, 2026
திண்டுக்கல்லில் துணிகர சம்பவம்!

வேடசந்தூர் அருகே விட்டல்நாயக்கன்பட்டியில் ஹோட்டல் உரிமையாளர் தொட்டியப்பனிடம் இருந்து 3 பவுன் தங்க நகை, 2 செல்போன்களை பறித்த வழக்கில் சேனன்கோட்டை சேர்ந்த பால்பாண்டி மற்றும் அவரது மகன்கள் சதீஷ்குமார், சந்தோஷ்குமார் ஆகிய 3 பேரை வேடசந்தூர் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 3 பவுன் தங்க நகை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


