News July 24, 2024

மக்களிடம் மனு பெற்ற கலெக்டர்

image

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர் நாள் கூட்டம் இன்று மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடைபெற்றது. இதில் மாற்று திறனாளிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்ற ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அறிஞர் அண்ணா சக்கரை ஆலை தலைமை நிர்வாகி இரவிச்சந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Similar News

News August 13, 2025

திருவையாறில் லாரி மோதி வாலிபர் பலி

image

திருவையாறு பங்களா தெருவை சேர்ந்தவர் குணசீலன்(30). இவர் விளாங்குடி மெயின் ரோட்டில் நடைபயிற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த லாரி குணசீலன் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த குணசீலன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் தப்போ ஓடிய நிலையில், இது குறித்து தகவல் அறிந்த திருவையாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய லாரி டிரைவரை தேடிவருகின்றனர்.

News August 13, 2025

குண்டர் சட்டத்தில் அடைக்க தஞ்சை ஆட்சியர் உத்தரவு

image

தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை காவல் நிலையத்திற்குப்பாட்ட பகுதியை சேர்ந்த தனது மாமனாரை தெலுங்கானா மாநிலத்திற்கு கடத்திச் சென்று கொலை செய்த குற்றவாளியான தெலுங்கானா மாநிலம், கரீம் நகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அரவிந் ராவ் (வயது-42), இவரை மாவட்ட கண்காணிப்பாளர் ராஜாராம் பரிந்துரையின் பேரில் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் உத்தரவிட்டுள்ளார்.

News August 13, 2025

தஞ்சை: மத்திய அரசு வேலை! தேர்வு கிடையாது..

image

மத்திய அரசின் இந்திய விமான நிலைய ஆணையத்தில் பல்வேறு துறைகளின் கீழ் காலியாக உள்ள Architect / Civil Engineer / Electrical Engineer / IT உள்ளிட்ட 976 பணியிடங்கள் GATE மதிப்பெண்கள் அடிப்படையில் நிரப்பப்படவுள்ளன. இதற்கு B.E முடித்தவர்கள் இங்கே <>க்ளிக்<<>> செய்து, வரும் செப்.27-க்குள் விண்ணப்பிக்கலாம். தேர்வு கிடையாது. மாத சம்பளமாக ரூ.40,000 முதல் ரூ.1.4 லட்சம் வரை வழங்கப்படும். இத்தகவலை மறக்காம ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!