News July 24, 2024
காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் தொடக்கம்

காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் டெல்லியில் தொடங்கியுள்ளது. இந்த கூட்டத்தில் காவிரி தொழில்நுட்ப குழு உறுப்பினர்கள், 4 மாநிலங்களை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர். இதில் தமிழகத்துக்கு காவிரி நீர் திறப்பது தொடர்பாக, கர்நாடக அரசுக்கு உத்தரவிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த கூட்டத்தில் ஆணையம் பிறப்பித்த உத்தரவை கர்நாடகா அரசு ஏற்கவில்லை.
Similar News
News March 25, 2026
மநீம டார்ச் சின்னத்தில் போட்டியிட வேண்டும்: திருமா

தேர்தலில் போட்டியிடாமல் கூட்டணியை மநீம ஆதரிக்கும் நிலை எடுத்திருப்பது ஏற்புடையதல்ல என திருமாவளவன் தெரிவித்துள்ளார். 4% அளவில் உறுதியான வாக்கு வங்கி வலிமையும், தமிழ் சமூகத்தின் நன்மதிப்பும் கொண்ட கமல்ஹாசனை விட்டுவிடாமல் அரவணைத்துக்கொள்ள வேண்டும்; தொகுதிகளின் எண்ணிக்கை எதுவானாலும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட ’டார்ச் லைட்’ சின்னத்திலேயே போட்டியிட அனுமதிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். <<-se>>#TNElection2026<<>>
News March 25, 2026
தக்காளி விலை மளமளவென குறைந்தது

வரத்து அதிகரிப்பால் காய்கறிகளின் விலை மளமளவென குறைந்து வருகிறது. குறிப்பாக, 1 கிலோ தக்காளி ₹6 – ₹8-க்கு கொள்முதல் செய்யப்படுவதால், சில்லறை கடைகளில் கிலோ ₹10 – ₹12-க்கு விற்பனையாகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். அதேநேரம் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். குறிப்பாக, மகாராஷ்டிராவில் 1 கிலோ தக்காளி ₹4-க்கு கொள்முதல் செய்யப்படுவதால், விரக்தியில் விவசாயிகள் தக்காளியை சாலைகளில் கொட்டுகினனர்.
News March 25, 2026
நாய்கள் இரவில் ஊளையிட இதுதான் காரணமா?

பொதுவாக நாய்கள் இரவில் ஊளையிட்டால், ’அது பேயை பார்த்து குரைக்கிறது’என்று சொல்வார்கள். இது நிஜமென்று பலர் நம்பினாலும், உண்மையில் இது மூடநம்பிக்கைதான். அறிவியல் ஆராய்ச்சிகளின்படி, பேய் இருப்பதும் உறுதியாகவில்லை; அது நாய்களின் கண்களுக்கு தெரிவதும் உறுதியாகவில்லை. துணை இல்லாமல் தனிமையில் தவிக்கும் நாய்களின் உளவியல் வெளிப்பாடே இத்தகைய ஊளையிடுதலுக்கு காரணம் என அறிவியலாளர்கள் சொல்கின்றனர்.


