News July 24, 2024

வங்கிக் கிளையை முற்றுகை இட வந்த விவசாயிகள்

image

திருப்பூர், உடுமலைப்பேட்டை பகுதியைச் சேர்ந்த விவசாயி வங்கியில் பெற்ற விவசாய கடனை வட்டி மற்றும் அசல் உடன் செலுத்தி ஓராண்டு காலம் ஆகியும், இன்னும கடனை ரத்து செய்யாமலும் பத்திரங்களை வழங்காமல் இருந்துள்ளனர். இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கனரா வங்கி கிளையை தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் இன்று முற்றுகை இட்டனர்.

Similar News

News November 8, 2025

திருப்பூர்: வாடகை வீட்டில் வசிப்போர் கவனத்திற்கு!

image

திருப்பூரில் வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பண பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. உங்கள் வீட்டின் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். இதை SHARE பண்ணுங்க.

News November 8, 2025

திருப்பூர்: வங்கியில் வேலை! APPLY NOW

image

திருப்பூர் மக்களே, தமிழகத்தில் உள்ள நபார்டு வங்கியின் நிதி சேவை நிறுவனத்தில், வாடிக்கையாளர் சேவை அதிகாரி (Customer Service Officer – CSO) பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இதற்கு 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மாதம் ரூ.20,000 – ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க nabfins.org/Careers/ என்ற முகவரியில் அணுகலாம். கடைசி தேதி 15.11.2025 ஆகும். (SHARE)

News November 8, 2025

வெள்ளகோவில்: விஜயகாந்த் நிலம்.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு

image

ஈரோடு(கி) தொகுதி MLA சந்திரகுமார். இவர், 2005ல் தேமுதிக-வில் இருந்தார். அப்போது, விஜயகாந்த் ஏழை மக்களுக்கு வழங்கும் வகையில், வெள்ளகோவில் அருகே 3ஏக்கர் நிலம் வாங்கினார். அப்போது சந்திரகுமார் மீது அந்த நிலம் கிரயம் செய்யப்பட்டது. 2016ல் சந்திரகுமார் திமுகவுக்கு மாறினார். இந்நிலம் குறித்து தேமுதிக சார்பில் கோர்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணையில், நிலத்தை திரும்ப வழங்க நீதிபதி உத்தரவிட்டார்.

error: Content is protected !!