News July 24, 2024
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்ட்டுள்ளார். சென்னையைச் சேர்ந்த ரவுடி வைரமணி, ஆம்ஸ்ட்ராங் கொலைக்குப் பின்பு தனது சொந்த ஊரான வீரநல்லூரில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, தனிப்படை போலீசார் நெல்லையில் அவரை கைது செய்தனர். அவர் ஆற்காடு சுரேஷின் கூட்டாளி என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது, கொலை சம்பவத்தில் தொடர்பு உள்ளதா என போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Similar News
News March 13, 2026
செங்கல்பட்டு: குடும்பத்தில் பிரச்னையா?

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதுபடி, பெண்களுக்கு ஏதேனும் குடும்ப வன்முறை நேர்ந்தால், உடனே இந்த எண்ணிற்கு (181) அழைத்து புகார் அளிக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணு
News March 13, 2026
தவெக கூட்டணி முடிவில் திடீர் மாற்றமா?

பனையூர் அலுவலகத்தில் தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் தலைமையில், இன்று திடீர் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தவெகவுடன் கூட்டணி அமைக்க பாஜக முயற்சிக்கும் சூழலில், இது குறித்து ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில் தவெக மாவட்ட செயலாளர்களில் 120/132 மா.செ பங்கேற்றனர். கூட்டணிக்கு 98 மாவட்ட செயலாளர்கள் ஆதரவு தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. தவெக கூட்டணிக்கு செல்லுமா என்பது குறித்து கமெண்டில் சொல்லுங்க.
News March 13, 2026
செங்கை: ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவ காப்பீடு!

முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், 1 குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழ் ஆகியவற்றுடன் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து, அடையாள அட்டையை பெற்றுக் கொள்ளலாம். மேலும் தகவல்களுக்கு 1800 425 3993 அழைக்கவும். ஷேர் பண்ணுங்க.


