News July 24, 2024

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது

image

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்ட்டுள்ளார். சென்னையைச் சேர்ந்த ரவுடி வைரமணி, ஆம்ஸ்ட்ராங் கொலைக்குப் பின்பு தனது சொந்த ஊரான வீரநல்லூரில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, தனிப்படை போலீசார் நெல்லையில் அவரை கைது செய்தனர். அவர் ஆற்காடு சுரேஷின் கூட்டாளி என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது, கொலை சம்பவத்தில் தொடர்பு உள்ளதா என போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Similar News

News March 6, 2026

இசை நிகழ்ச்சி காரணமாக நள்ளிரவு வரை மெட்ரோ சேவை

image

சென்னையில் நடைபெறும் ஹிப்ஹாப் ஆதி இசை நிகழ்ச்சியை முன்னிட்டு, நாளை 7ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை மெட்ரோ ரயில் இயக்கப்படும் என சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. நந்தனம் – விம்கோ நகர் மற்றும் நந்தனம் – விமான நிலையம் வழித்தடங்களில் ரயில்கள் நள்ளிரவு வரை இயக்கப்படும். ஹிப்ஹாப் தமிழா இசை நிகழ்ச்சிக்கான ஸ்பான்சர் பயணச்சீட்டு வைத்திருப்பவர்கள் இலவசமாக மெட்ரோவில் பயணம் செய்யலாம் என்ற தெரிவித்துள்ளது

News March 6, 2026

மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட பாமக தலைவர் மனு தாக்கல்

image

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (மார்ச் 05), அதிமுக கூட்டணி சார்பில் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட பாமகவுக்கு ஒரு சீட்டு ஒதுக்கப்பட்டுள்ளது.இதில், பாமக சார்பில் போட்டியிட,பாமக தலைவர் அன்புமணி வேட்புமனு தாக்கல் செய்தார். இந்நிகழ்வில், அதிமுக மூத்த நிர்வாகிகள் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

News March 6, 2026

வண்ண மீன் பிரியர்களுக்கு நற்செய்தி!

image

சென்னை கொளத்தூரில் வண்ண மீன் வளர்ப்பு, பராமரிப்பு மற்றும் நோய் மேலாண்மை குறித்த கட்டணமில்லா விழிப்புணர்வுப் பயிற்சி வரும் மார்ச் 07 (சனிக்கிழமை) அன்று நடைபெற உள்ளது. கொளத்தூர் வண்ண மீன் வர்த்தக மையத்தில் காலை 10:00 மணி முதல் மாலை 3:00 மணி வரை நடைபெறும் இந்த முகாமில் விருப்பமுள்ளவர்கள் நேரடியாகக் கலந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!