News July 24, 2024
புதிய அரசு பேருந்து இயக்கம்

செங்கல்பட்டு – மாமல்லபுரம் வழித்தடத்தில், 60ஆம் எண் கொண்ட ஒரேயொரு அரசு பேருந்து மட்டும் இயக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், பயணிகளின் கோரிக்கையை ஏற்று 508ஆம் எண் கொண்ட என்ற புதிய அரசு பேருந்து இன்று முதல் இயக்கப்படுகிறது. இது சென்னை மாநகருக்குள்ளும் செல்லும். இதில், எக்ஸ்பிரஸ் கட்டணமாக ரூ.25 வசூலிக்கப்படுகிறது. குறிப்பாக, பெண்களுக்கு கட்டணமில்லை என போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Similar News
News March 7, 2026
செங்கை: சனி தோஷம் நீக்கும் அற்புத கோவில்

பல்லாவரம் அருகே உள்ள பொழிச்சலூரில் அருள்மிகு ஸ்ரீ அகத்தீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு அகத்தியருக்கு, சிவன் சுயம்புவாக தோன்றி காட்சியளித்ததாகவும், சனீஸ்வர பகவானே இத்தல இறைவனை வழிபட்டதாகவும் கூறப்படுகிறது. ஏழரைச் சனி, பாதச் சனி, அஷ்டமச் சனி, அர்த்தாஷ்டமச் சனி, கண்டகச் சனி என எந்த வகையான தோஷமாக இருந்தாலும், இங்கு வழிபட்டால் நிவர்த்தியடையும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. ஷேர் பண்ணுங்க.
News March 7, 2026
பட்ஜெட் நிதியில் 30% கொள்ளை – விஜய்

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் பேசிய விஜய், “தமிழக பட்ஜெட்டுக்கான நிதியில் 30% முதலமைச்சருக்காக ஒதுக்கப்படுவதாக குற்றம்சாட்டியுள்ளார். மேலும் “காசில்லை காசில்லை என்று கூறிவிட்டு விடியற்காலையில் ரூ.5,000 மக்களுக்கு வழங்கியது எப்படி? ஸ்டாலின் சார் Tax-ஐ ஒழித்தாலே மக்களுக்கு பணத்தை வழங்க முடியும்” என்றார். விஜய்யின் இந்த குற்றசாட்டை நீங்க எப்படி நினைக்கிறீங்க?
News March 7, 2026
தவெக தலைவர் அறிவித்த வாக்குறுதிகள்

▶️திருமணத்திற்கு ஒரு சவரன் தங்கம், பட்டுப் புடவை வழங்கப்படும்
▶️அனைத்து அரசுப் பேருந்துகளிலும் மகளிர் இலவச பயணம்
▶️மாணாக்கரின் தாய் (அ) பாதுகாவலருக்கு ரூ.15,000
▶️பெண்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க அஞ்சலை அம்மாள் அதிவிரைவு நீதிமன்றம்
▶️தமிழ்நாட்டில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்படும்
▶️பொது போக்குவரத்து வாகனங்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய Smart panic button


