News July 24, 2024

ரேஷன் கார்டு விண்ணப்பித்த 6270 பேர் வீடுகளில் ஆய்வு

image

தேனி மாவட்டத்தில் தாலுகா வாரியாக ஆண்டிபட்டி 1070, போடி 692, பெரியகுளம் 1049, தேனி 759, உத்தமபாளையம் 2700 என மொத்தம் 6270 பேர் புதிய ரேஷன் கார்டு வேண்டி விண்ணப்பித்துள்ளனர். இவர்களை வீட்டிற்கே சென்று ஆய்வுகள் செய்யும் பணி தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆய்விற்கு பின் ரேஷன் கார்டுகள் அச்சிட்டு வழங்கும் பணி துவங்க உள்ளது என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

Similar News

News March 4, 2026

தேனி: உங்களது Certificate-ஐ உடனே பெறுவது இனி ஈஸி!

image

தேனி மக்களே; 10th, 12th, Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற<> E-பெட்டகம் <<>>என்ற இணையதளத்தில் உங்கள் ஆதார் எண்ணை கொடுத்து OTP சரிபார்த்து உள்ள சென்றால் போதும். உங்களுக்கு தேவையான 10th, 12th கல்லூரி சான்றிதழ் முதல் பிறப்பு, வருமானம் போன்ற அனைத்து சான்றிதழ்களை எளிமையாக பதிவிறக்கம் செய்யாலாம். ஷேர் செய்யுங்கள்

News March 4, 2026

தேனி: பைக் மோதிய விபத்தில் முதியவர் உயிரிழப்பு.!

image

மதுரையை சேர்ந்தவர் காஜாஉசேன் (80). இவர் சில தினங்களுக்கு முன்பு உத்தமபாளையத்தில் உள்ள அவரை நண்பரை பார்ப்பதற்காக வந்துள்ளார். அப்போது பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த காஜாஉசேன் மீது சுப்பிரமணி என்பவர் பைக்கை ஓட்டி வந்து மோதி உள்ளார். இந்த விபத்தில் படுகாயம் அடைந்த முதியவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நேற்று முன்தினம் உயிரிழந்தார். இது குறித்து உத்தமபாளையம் போலீசார் வழக்கு பதிவு.

News March 4, 2026

தேனி: வீட்டின் பூட்டை உடைத்து 13.5 பவுன் திருட்டு

image

பெரியகுளம், வடகரை அனுமாா் கோவில் தெருவைச் சோ்ந்தவா் அலாவுதீன். குடும்பத்துடன் கொடைக்கானலுக்கு சென்றுவிட்டாா். இந்நிலையில் நேற்று வீட்டுக்கு வந்து பார்க்கும்போது, வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். உள்ளே சென்று பார்த்தபோது 13.5 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து பெரியகுளம் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.

error: Content is protected !!