News July 24, 2024
மீன் மார்க்கெட்டை காலி செய்யக்கோரி எம்எல்ஏ கடிதம்

பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் அமைச்சர் நேருவிற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், 2018ல் உக்கடம் மேம்பாலம் அமைக்க சிஎம்சி காலனி மக்களின் இடம் பெறப்பட்டது. மாற்றாக அப்பகுதி மீன் மார்க்கெட்டை அப்புறப்படுத்தி 18 மாதங்களில் 520 வீடுகள் கட்டி தரப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது. 4 ஆண்டுகள் ஆகியும் மீன் மார்க்கெட்டை அப்புறப்படுத்தாததால் மக்கள் வீடின்றி அவதிப்படுகின்றனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
Similar News
News March 8, 2026
சட்டமன்ற தேர்தலில் கோவையில் களமிறங்கும் செந்தில்பாலாஜி?

கோவை மண்டல திமுக பொறுப்பாளராகச் செந்தில் பாலாஜி நியமிக்கப்பட்ட பின், உள்ளாட்சி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் திமுக அபார வெற்றி பெற்றது. இதனால் வரும் தேர்தலில் அவர் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட வேண்டுமெனப் பல நிர்வாகிகள் விருப்ப மனு அளித்துள்ளனர். அவர் கோவை அல்லது கரூர் என எந்த தொகுதியில் களம் காண்பார் என்ற எதிர்பார்ப்பு கட்சிக்குள் சூடுபிடித்துள்ளது. உங்கள் கருத்து என்ன மக்களே?
News March 8, 2026
கோவையில் ஒரே நாளில் 28 எஸ்.ஐ-க்கள் அதிரடி இடமாற்றம்!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இதனை முன்னிட்டு மூன்றாண்டுகள் ஒரே இடத்தில் பணிபுரியும் அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறையினரை பணியிட மாற்றம் செய்ய தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது. அதன் பேரில் கோவை மாநகரில் ஒரே நாளில் 28 சப்-இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான ஆணையினை சிட்டி போலீஸ் கமிஷனர் கண்ணன் நேற்று வெளியிட்டுள்ளார்.
News March 8, 2026
ஆலாந்துறை: வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

கோவை ஆலாந்துறையை சேர்ந்தவர் செல்வராஜ் (55). இவர் உக்கடம் அரசு போக்குவரத்து கழக கிளையில் டிரைவராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் நேற்று நேற்று கோவை பூலுவப்பட்டி – சித்திரைச்சாவடி பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கார் இவர் மீது மோதியது. இதில் காயமடைந்து செல்வராஜ் உயிரிழந்தார். இது குறித்து ஆலாந்துறை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


