News July 24, 2024

விருதுநகரில் ஒரே நாளில் இரண்டு கொலைகள்

image

ஸ்ரீவி அருகே தவிர்த்தான் கிராமத்தை சேர்ந்த குருசாமி என்பவர் நேற்று அப்பகுதியில் உள்ள நூலகம் அருகில் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார். விசாரணையில் முன்விரோதம் காரணமாக அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் அவரை அடித்து கொலை செய்தது தெரியவந்தது. இதேபோல் ராஜபாளையம் அருகே குறிச்சியார்பட்டியை சேர்ந்த ரானுவ வீரர் பொன்னுச்சாமி நேற்று இரவு மர்ம நபர்களால் அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

Similar News

News March 11, 2026

விருதுநகர்: உங்க பெயரில் நிலம் இருக்கா? உடனே செக் பண்ணுங்க!

image

விருதுநகர் மக்களே நில உரிமையாளர்கள் சிட்டா, புலப்படம் (FMB) மற்றும் அடங்கல் ஆகியவற்றை தனித்தனியாக பதிவிறக்கம் செய்வதற்குப் பதிலாக, இனி <>https://eservices.tn.gov.in <<>>என்ற இணையதளத்தில் ஒருங்கிணைந்த நில ஆவணமாகப் பெற்றுக்கொள்ளலாம்; இதற்காக மாவட்டம், வட்டம் மற்றும் புல எண் விவரங்களை உள்ளீடு செய்து, வங்கி மற்றும் அரசு தேவைகளுக்கான ஆவணங்களை எளிதாகப் பதிவிறக்கம் செய்யலாம். இந்த நல்ல தகவலை SHARE பண்ணுங்க!

News March 11, 2026

விருதுநகர்: நீங்க Gpay, Phonepe, paytm பயன்படுத்துறீங்களா?..

image

விருதுநகர் மக்களே Gpay, Phonepe, paytm இனி தேவை இல்லை. நெட் இல்லாமல் பணம் அனுப்பும் வசதி தெரியனுமா? இந்த எண்களுக்கு 080 4516 3666, 080 4516 3581, 6366 200 200 போனில் அழைத்து உங்கள் வங்கியை தேர்ந்தெடுத்து, UPI PIN பதிவு செய்து பணம் அனுப்புவது, நெட் பில், கேஸ், கரண்ட்பில், ரீசார்ஜ் செய்யலாம். இனி உங்களுக்கு பணம் செலுத்த நெட் தேவை இல்லை. இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க..

News March 11, 2026

விருதுநகர்: பட்டாசு ஆலைகள் ஊரில் இருந்து UPSC சாதனை

image

விருதுநகர், ஆமத்தூரை சேர்ந்த வைஷ்ணவி, சிவில் சர்வீசஸ் தேர்வில் அகில இந்திய அளவில் 492-வது இடம் பெற்று சாதனை படைத்துள்ளார். விருதுநகர் பள்ளிப் படிப்பை முடித்து, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.டெக் படித்தார். “நான் முதல்வன்” திட்டத்தில் பயிற்சி பெற்று 3-வது முயற்சியில் வெற்றி பெற்றார். பட்டாசு ஆலைகள் அதிகம் உள்ள ஆமத்தூரில் இருந்து சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்ற முதல் பெண் இவர். *SHARE

error: Content is protected !!